தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 01 - சசிரேகா
முன்னுரை
காதலிக்காக காதலனும், காதலனுக்காக காதலியும் தங்களுக்கு வந்த பரிட்சையில் வெற்றி பெற்று இணைந்தார்களா இல்லையா என்பதே கதையாகும்
பாகம் 1
சென்னை கப்பல் துறைமுகம்
”அண்ணா ரிஷிண்ணா கீழே பாருங்க” என உரக்க கத்தினான் அர்ஜூன் அந்த குரலைக் கேட்டு
”எதுக்குடா கத்தற” என மேலிருந்த வண்ணமே கேட்டான் ரிஷிகேசன்
”நீ கீழே வந்து பாரு, இங்க ஒரு பஞ்சாயத்து” என கத்தவும் பொறுமையிழந்த ரிஷி கப்பல் கிரேனிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தான்.
அவன் இறங்கிய பின் அவனிடம் வந்த அர்ஜூன்
”அண்ணா நம்ம சரக்கை எடுக்க விடமாட்டேங்கறாங்க”
”யாரு” என சந்தேகமாக கேட்டான் ரிஷி
”மாணிக்கவேல்”
”சரி நான் போய் அவனை என்னன்னு பார்க்கறேன், நீ மிச்ச மீதி வேலையை முடி சீக்கிரம்”
”சரிண்ணா” என அவன் கிரேனில் ஏறி மிச்ச வேலைகளை செய்து முடிக்கலானான்.