அது ரிஷிகேசன்தான். வீட்டில் இருக்கும் நேரங்களில் எல்லாம் தாத்தாவிடம் பேசியே அவரது அனுபவங்களை மனதில் பதிய வைத்துக்கொள்வான். அந்த அனுபவங்களை வைத்து அவன் பலமுறை வெற்றிகளையும் பெற்றான்.
மாணிக்கவேல் ரிஷியின் தந்தை காலத்திலேயே பெரிய போட்டியாளன். என்றுமே அவனுக்கு ரிஷி கீழ்படிந்ததில்லை. ரிஷியின் நல்ல குணமும் திறமையும் விவேகமான செயலும் சேர்ந்ததால் அவர்களின் குடும்பத் தொழில் முன்னைவிட 10 மடங்கு பெருகியது அதில் பணிபுரியும் மக்களுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்தது. இவனின் தொழில் முன்னேற்றத்தை தாங்க இயலாத பொறாமைக்காரனாக இருப்பவன் மாணிக்கவேல் எப்படியாவது இவனை அடக்கவேண்டுமென நினைத்தான். மாணிக்கவேலிடம் வேலைசெய்த பாதி வேலையாட்கள் தானாகவே ரிஷியின் கம்பெனியில் வேலைக்கு சென்று சேர்ந்தனர் அதை மாணிக்கவேலால் பொறுக்க முடியவில்லை.
தொழில் நஷ்டம் இல்லையென்றாலும் வருமானம் ஏறக்குறைய வந்துவிடும். ஆனால் ரிஷியை அவனின் தந்தை பிரபலமான ஊட்டி கான்வென்ட்டில் படிக்கவைத்ததால் அவனுக்கு ஆங்கில மொழி சரளமாக வந்தது அதன் பிறகு அவன் லண்டனில் பிரபல கல்லூரியில் எம்பிஏ படித்தான். இதனால் வெளிநாடுகளில் இருக்கும் பலருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு தன் வியாபாரத்தை பெருக்கும் அறிவுதிறன் படைத்திருந்தான்.
அவன் இதுவரை கப்பல் மார்க்கமாகவும் விமான மார்க்கமாகவும் பல நாடுகளுக்கு சென்று தன் தொழிலை விருத்தி செய்தவன். அந்த திறமை சுட்டுப்போட்டாலும் மாணிக்கவேலுக்கு வராது. தன் மகன் கதிர்வேலனை கூட படிக்க வைத்தார் ரிஷியை போல அவனும் பெரிய படிப்பு படித்தான். ஆனால் அவனுக்கு இந்த வியாபாரத்தில் நாட்டமின்றி ஐடி துறையில் சேர்ந்துவிட்டான். மகள் வெண்ணிலா மட்டும் தன் தந்தையின் பேச்சை மீறாமல் அவர் என்ன சொன்னாலும் அதை செய்து முடிப்பாள்.
அதற்காகவே ரிஷியை போலவே மேற்கல்வியை கற்றாள். அவளுக்கு ரிஷியை மிகவும் பிடிக்கும் அழகானவன் அறிவானவன் பணக்காரன் முக்கியமாக திறமையானவன் என்ற எண்ணத்தில் அவளும் அவனை மடக்க பல சந்தர்ப்பங்களை தேடுவாள் அவன்