வேலைசெய்யும் இடத்திற்கு சென்று தொந்தரவு தருவது போன் செய்து பேசுவது என பல விதங்களில் போராடியும் இன்று வரை அவனுடைய மனதை அவளால் வெல்ல முடியவில்லை.
மாணிக்கவேலுக்கு எப்படியாவது அவனுக்கு தன் மகள் வெண்ணிலாவை திருமணம் செய்து வைத்து தன்னோடு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பல வருடங்களாக ஊறிப்போனது. அது நடக்காது என அவ்வப்போது முகத்தை காட்டும் ரிஷியிடம் வீம்புக்கு சண்டைக்கு செல்வான் மாணிக்கவேல்.
இன்றும் அதே போல் மாணிக்கவேல் ரிஷியின் வண்டிகள் அடங்கிய சரக்கை கப்பலில் ஏற்றவிடாமல் தடுத்து நிறுத்திவைத்தான். காரணம் கேட்க வந்தவர்களை தன்னிடம் இருக்கும் கூலிக்காரர்களை வைத்து அடித்து விரட்டினான். மோசமானவன் என்பதால் அவனிடம் யாரும் நெருங்க மாட்டார்கள். ஒருவழியாக ரிஷி அங்கு வந்து சேர்ந்ததும் மாணிக்கவேல் அவனை ஏற இறங்க பார்த்து
”என்னப்பா நீயே பூரா சரக்கையும் ஏத்திட்டா நாங்க எல்லாம் என்ன பண்றது எங்க சரக்கை எப்படி கொண்டு போறது இருக்கறது ஒரு கப்பல் அதுலயும் இடம் தரலன்னா எப்படி” என கேட்க அவனும் நிதானமாக
”இப்ப என்ன வேணும் உங்களுக்கு உங்க சரக்கை ஏத்த கப்பலா இல்லை வேற கப்பல்ல ஏத்திக்க வேண்டியது தானே நான் இந்த கப்பலில் சரக்கை ஏற்ற 6 மாசம் முன்னாடியே புக் பண்ணிட்டேன் என்னால இடம் கொடுக்க முடியாது என்னோட சரக்கு வைக்கவே இங்க இடம் பத்தல இதுல உங்களுக்கு நான் எதுக்கு இடத்தை தரனும்” என நிதானமாக சொன்னான்.
”அப்படி சொன்னா எப்படி ரிஷி நாங்களும் உன்னை மாதிரி தானே இனம் இனத்தோட சேர்றதுதானே நல்லது” என ஏற்றி இறக்கி பேசினாள் வெண்ணிலா மாடர்ன் டிரஸ்ஸில்
அவனுக்கு தலையில் அடித்துக்கொள்ளலாமா என்பது போல் இருந்தது.
”எந்த இடத்தில் எந்த மாதிரி உடையணிந்து வந்து நின்று கொண்டிருக்கிறாள். இவள் அப்பனுக்கு அறிவிருக்கா 100 பேர் சுத்தி நின்னுகிட்டு இருக்காங்க பொண்ணை ஒழுங்கா