தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 05 - சசிரேகா
மாலையில் வீடு திரும்பினாள் ஹரிணி.
ஹாலில் இளங்கோவின் போட்டோ புது பிரேமில் அழகாக இருக்க மனம் மகிழ்ந்தாள்
தருண் அங்கேயேதான் இருந்தான், தன்னை ஆசையாக அழைப்பாள் என நினைத்தவனுக்கு ஏமாற்றம்
”இளங்கோ“ என ஆசையாக அழைத்து அந்த போட்டோவிடம் சென்று அதை தடவியபடி நிற்க தருண் கோபத்தில் பற்களை கடித்தான். அவளோ
”ஐ மிஸ் யூ இளங்கோ, ஐ லவ் யூ” என சொல்ல தருணுக்கு வெறுப்பே வந்தது
”ஹரிணி” என கோபமாக அழைக்க அவளோ உடனே தருணை பார்த்து
”இதெல்லாம் உங்க வேலைதானா ஸோ ஸ்வீட் தருண்” என சொல்லி அவனை ஆரத்தழுவி உடனே விட்டு விலகி நின்றாள். அந்த ஒரு அணைப்பு தருணின் கோபத்தை ஓட்டியது
”உனக்காகதான் இதை செய்தேன் ஹரிணி, பழைய பிரேமா இருந்ததா சரின்னு புதுசு மாத்திட்டேன் உனக்கு பிடிச்சிருக்கா”
”ரொம்ப பிடிச்சிருக்கு தருண் தாங்ஸ், எனக்கு கூட இந்த எண்ணம் வரலை எப்படி உங்களுக்கு வந்தது”
”அதுவா சும்மா வீட்ல இருந்தேனா, என்ன செய்றதுன்னு தெரியலை அதான் இந்த போட்டோவை பார்த்ததும் உடனே பிரேம் மாத்தலாம்னு தோணி செய்தேன், இப்படி செய்தா நீ சந்தோஷப்படுவேன்னு நினைச்சேன்”
”உண்மைதான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தருண்” என சொல்ல அவனோ மென்மையாக சிரிக்க அவளோ அவனின் கைகாயத்தைக் கண்டு அதிர்ந்து