(Reading time: 11 - 22 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

தொடர்கதை - திருமதி அகத்தியன் - 13 - சசிரேகா

  

கத்தியா அகத்தியா” என பெண்குரல் ஒன்று அகத்தியனை உசுப்பியது. மெல்ல கண்கள் திறந்தான். தரையில் படுத்துக் கிடந்தான். அவன் முகத்திற்கு மேல் 3 நாச்சியாவின் முகங்கள் கவலை முகத்துடன் அவனையே பார்க்க அவனுக்கு திக்கென்றது ஆஆஆ என அலறியபடியே எழுந்து அமர்ந்தான். பயத்தில் வெலவெலத்துப் போனான். அக்கம் பக்கம் பார்த்தான், யாருமில்லை நிம்மதியானான், அந்நேரம் காலிங்பெல் அடிக்கவும் அந்தச் சத்தம் கூட அவனுக்கு சாவு மணி போல கேட்கவே அதிர்ந்தான், பின் தன்னையே திடப்படுத்திக் கொண்டு வாசல்கதவை திறந்துப் பார்த்தான் கமிஷனர் இருக்க அவரைக் கண்டதும் நிம்மதியாகி சட்டென அவரை வீட்டிற்குள் இழுத்தான்

  

”அகத்தியா என்ன செய்ற, எதுக்காக என்னை இப்படி இழுக்கற”

  

”ஷ்ஷ்ஷ் கேட்குதா“

  

”என்னது”

  

”ப்ச் எனக்கு கேட்கற குரல் உங்களுக்கு கேட்குதா”

  

”நீ பேசறதுதான் எனக்கு கேட்குது ஆமா என்னாச்சி உனக்கு உடம்பு சரியில்லையா ஆமா நாச்சியா எங்க நாச்சியா நாச்சியா” என அழைக்க அவனோ

  

”நாச்சியா இல்லை”

  

”இல்லைன்னா எங்க வெளிய போயிருக்காளா“

  

”நாச்சியா இருக்கா ஆனா அவள் நாச்சியாவா இல்லை யாரோ போல இருக்கா”

  

”உளறாத அகத்தியா நானே முக்கியமான விசயமா பேச வந்தேன், நாச்சியாவும் இருந்தா ரெண்டு பேரையும் வைச்சி பேசலாம்னு இருக்கேன் அவளை கூப்பிடு”

  

”ப்ச் சொன்னா புரியலையா உங்களுக்கு, நாச்சியா இப்ப 3 நாச்சியாவா மாறிட்டா“

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.