தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 03 - சசிரேகா
காலை டிபன் சாப்பிட்டு முடித்ததும் வேலைக்கு செல்ல தயாரான ரிஷியிடம் அமைதியாக வந்துப் பேசினாள் நந்தினி
”அத்தான்” என அவள் மென்மையாக அழைக்கவே ஆசையாக அவளிடம்
”ம் சொல்லு” என்றான் ராகமாக
”அது நான் ஒண்ணு சொன்னா நீங்க கோச்சிக்க மாட்டீங்கள்ல”
“இல்லை சொல்லு”
“சத்தியமா” என அவள் கைநீட்டவும் ரிஷி அர்ஜூனை பார்த்தான். அவனோ புரியாமல் பார்ப்பதைப்பார்த்த ரிஷியும் அவளது கையில் தன் கையை வைத்து
”சத்தியம் சொல்லு என்ன விசயம்”
“என்னை ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்துடுங்க அத்தான்.”
“ஏன் இந்த வீட்ல என்ன குறைச்சல் உனக்கு” என அவன் கத்த அவனிடம் மென்மையாக பேசினாள்
”அத்தான் ப்ளீஸ் இந்த வீட்ல எந்த குறைச்சலும் இல்லை, ஆனா என்னால உங்க மானம் மரியாதை போயிட கூடாது. இப்பவே வெண்ணிலா வந்து பார்த்து கத்தி சண்டை போட்டுட்டு போயிருக்காங்க, நான் இங்க இருக்கற விசயம் தெரிஞ்சா உங்க வீட்ல இருக்கறவங்களுக்கு கோபம் வரும், வீணா உங்களை தப்பா பேசுவாங்க”
“அதுக்கு”
“உங்களை யாரும் தப்பா பேசினா என்னால அதை தாங்க முடியாது அதான்” என அவள் சொல்ல மெதுவாக பெருமூச்சு விட்டவன் அவளிடம்