“உனக்கு ஏதாவது பொருள் வாங்கனும்னா கூட என்கிட்ட சொல்லு நான் வாங்கிட்டு வரேன்”
“சரிங்கண்ணா கண்டிப்பா சொல்றேன்”
“ரிஷியண்ணாவை நினைச்சி நீ பயப்படாத, அவர் குழந்தை மாதிரி அதோட நீயும் தனியா இருக்கறதால பயப்படறாரு, இப்ப நீ சேப்டியா இங்க இருக்கறது தெரிஞ்சா அவர் அமைதியாயிடுவாரு அவரை நான் சரிப்பண்ணிடுவேன், நீ தைரியமா இருக்கனும்”
“சரிங்கண்ணா”
“என்னையும் அண்ணனையும் தவிர யார் வந்து கூப்பிட்டாலும் போயிடாத”
“என்னைத்தேடி யார் வருவாங்க”
“வருவாங்க உன் மாமன் வருவான் அவன் பையன் வருவான், ஏன் வெண்ணிலா கூட வரலாம், கௌதம் கூட வரலாம், இல்லை நீ நாளைக்கு வேலைக்கு போறியே அங்க எவனாவது உன்னை பாலோ பண்ணி வரலாம், நீ வேற அழகாயிருக்க அதான் பயமாயிருக்கு” என அச்சத்துடன் சொல்ல அவள் சிரித்தாள்
”நான் என்னை பார்த்துக்கிறேன் அண்ணா” என சொல்ல வார்டன் அர்ஜூனின் பாசத்தைக்கண்டு மெச்சிப்போய் அவனிடம்
”அவள் என்ன சின்ன குழந்தையா, நாங்க பார்த்துக்கறோம் வாட்ச் மேன்கிட்ட நான் சொல்லிடறேன், இவளை தேடி நீங்க வராம வேற யார் வந்தாலும் விரட்டுன்னு சொல்லிடறேன் போதுமா, அவளை பத்திரமா விட்டுட்டு போங்க. இதுக்கே இப்படின்னா நாளைக்கு அவளுக்கு கல்யாணம் ஆனா என்ன செய்வீங்க கூடவே போய்டுவீங்களா“ என கேட்டு சிரிக்க
”அதுக்கென்ன மேடம் அப்பா அம்மா இல்லாம இருந்த எனக்கு இவள்தான் துணை, அப்படி