(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

சென்றாள் நந்தினி

  

ஏற்கனவே அந்த அறையில் இன்னொரு பெண் தங்கி இருக்கவே அவளிடம் நட்பு பாராட்டினாள்

  

என் பேரு நந்தினி

  

என் பேரு மாலினி உங்க சொந்த ஊரு என்ன

  

கன்னியாகுமரி

  

என் சொந்த ஊரு நாமக்கல் பக்கம்

  

ஓ அப்புறம் என்ன வேலை செய்றீங்க

  

கார்மெண்ட்ஸ்ல சின்னதா வேலை செய்றேன் ஆமா நீங்க என்ன வேலை செய்றீங்க

  

இல்லை நாளைக்குதான் இன்டர்வியூ இருக்கு போனாதான் தெரியும்என இருவரும் தங்கள் கதைகளை பேசிக்கொண்டனர்.

  

நந்தினி மறந்தும் கூட ரிஷியை பத்தி பேசவில்லை, தன் தாய் தந்தை இறந்துவிட்டதாகவும் தன் அண்ணன் அர்ஜூன் தன்னை பார்த்துக்கொள்வதாகவும் சொல்லி முடித்தாள், மாலினியும் அதை நம்பி தன் சொந்த கதையை அப்படியே சொல்லி முடித்தாள்.

  

ஆபிசுக்கு வந்த ரிஷிக்கோ வேலையே ஓடவில்லை, மூளையும் வேலை செய்யவில்லை, அவனது நினைவு முழுவதும் நந்தினியிடமே இருந்தது, வழக்கம் போல மீட்டிங் ஆரம்பித்து அனைவரும் பேசிக்கொண்டிருக்க மௌனமாகவே இருந்தான் ரிஷி. அவனின் மௌனத்தை பார்த்த அவனது தம்பி கருணா

  

என்னாச்சிண்ணா உங்க முகம் ஏன் ஒருமாதிரியா இருக்கு எல்லாரும் பேசறாங்க நீங்க பேசாம அமைதியா இருக்கீங்க

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.