“அதுக்கு நேராவே நம்ம கம்பெனியில வேலைக்கு வைச்சிடலாமே”
”சரி வைக்கலாம் ஆனா அந்த வெண்ணிலா தேவையில்லாம வீட்ல எதையாவது சொல்லி அதனால தாத்தா நந்தினியை விரட்டிட்டா”
“அய்யோ” என அலறினான் ரிஷி
”அதே தான் அதுக்குதான் நான் சொல்றேன், கொஞ்சம் பொறுமையா இருக்கலாம்னு வெண்ணிலாகிட்டயிருந்து இவளை காப்பாத்திட்டா போதும், அவளும் இவள் இல்லைன்னு தெரிஞ்சா அமைதியாயிடுவா, தாத்தாகிட்ட மெதுவா பேசி இவளை பத்தி சொன்னா தாத்தாவும் மனசு மாறி இவளை ஏத்துக்குவாரு”
“தாத்தா மனசு மாறி இவளை ஏத்துக்குவாருல்ல” என ஆசையாக கேட்டான் ரிஷி.
அவன் கேட்ட விதத்தை கண்டு வியந்தான் அர்ஜூன் தலையை ஆம் என ஆட்டவும் ரிஷியும் அர்ஜூனை கட்டியணைத்துக்கொண்டு
”நீதான் என் நண்பன், என் கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்ட ஒருத்தன் நீதான்” என சொல்லிவிட்டு அவனை விட்டு விலகி நந்தினியை பார்த்தான்.
”ஒண்ணும் பிரச்சனையில்லை, 6 மாசம்தான் இப்படிங்கறதுக்குள்ள போயிடும் அப்புறம் நான் உன்னை என் வீட்டுக்கு அதான் என் அப்பா அம்மா தாத்தா வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறேன் சரியா, அதுவரைக்கும் நீ கொஞ்ச நாள் ஹாஸ்டல்ல தங்கி அட்ஜஸ்ட் பண்ணிக்க, நான் இருக்கேன் நான் அடிக்கடி வந்து உன்னை பார்த்துக்கிறேன்”
“இல்லை அத்தான் வேணாம், அப்புறம் ஹாஸ்டல்ல இருக்கறவங்க உங்க வீட்ல தகவல் சொல்லிடப்போறாங்க”
“ஓ அப்படியா சரி வேணாம், 6 மாசம்தானே நான் உன்கூட போன்ல பேசறேன் வீடியோ காலிங்ல பேசலாம், நீயும் என்கிட்ட தினமும் என்ன நடந்திச்சின்னு சொல்லு நான் உனக்கு