மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 15 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
"அம்மா? என்ன பேச்சும்மா இது???" ப்ரியம்வதா கலைவாணியிடம் சீறினாள்!
"நான் உன் அம்மா ப்ரியா. பேசலாம். அதுவும் உன் கிட்ட தானே சொல்றேன், தப்பில்லை! இப்போவும் சொல்றேன். வினாயக் தப்பா எதுவும் செய்திருப்பார்ன்னு எனக்கு தோணலை. ஆனா ஐஸ்வர்யா சொல்ற மாதிரி அவர் ஒரு சராசரியானவராவும் தெரியலையே. நீ தான் அவர் மேல அக்கறைக் காட்டுற."
உண்மை தானே! ப்ரியம்வதாவின் மனம் சுட்டது!
"அதுக்காக அந்த ஐஸ்வர்யா சொல்ற யாரோ ஒருத்தர் நம்ம வீட்டுக்கு வர நீங்க அனுமதிக்கலாமா??"
"அப்படி ஒருத்தர் வந்த பிறகாவது வினாயக்கோட கண்ணு திறக்குதான்னு பார்ப்போம்ன்னு முதல்ல நினைச்சேன். இப்போ அதெல்லாம் வேண்டாம். ஸ்ரீனிவாஸ் நல்லவனா தெரியுறான். தெளிவானவனாவும் இருக்கான். நீ ஐஸ்வர்யா மேல இருக்க கோபத்தை அவன் கிட்ட காட்டாம பொறுமையா யோசிச்சுப் பாரு. நீ புத்திசாலி ப்ரியா. எது சரி, எது தப்புன்னு உனக்கே யோசிச்சா புரியும்."
"அம்மா? என்னால அதெல்லாம் இப்போ யோசிக்க முடியாதும்மா. வினாயக் பாவம். அவர் ரொம்ப நல்லவர்ம்மா."
“அவர் நல்லவரா இருக்கலாம். ஆனால் அவருக்கு என்னமோ ஹெல்த் ப்ராப்ளம் இருக்கு. நல்ல டாக்டர் கிட்ட அவரை கூட்டிட்டு போ. இல்ல அவரையே போக சொல்லு. அதுக்கு உதவி செய்யனும்னா செய்யலாம். அதை தாண்டி அவர் சகவாசம் உனக்கும் வேண்டாம். நம்ம குடும்பத்துக்கும் வேண்டாம் ப்ரியா!”
“அம்மா!”
“இங்கே பாரு தேவைக்கு அதிகமா யோசிக்குறது நல்லதில்லை. நான் கடைக்கு போறேன். என் கூட வா. அப்படி போயிட்டு வரது மனசுக்கு நல்லா இருக்கும்.”