தொடர்கதை - திருமதி அகத்தியன் - 14 - சசிரேகா
அகத்தியன் நாச்சியாவை அழைத்துக் கொண்டு தலைதெறிக்க ஓடினாலும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு அந்த தெருவில் இருந்த கோயிலுக்குள் நுழைந்து ஓரிடத்தில் அவளை அமரவைத்துவிட்டு கடவுளுக்கு முன் இருந்த விபூதி குங்குமத்தை கொண்டு வந்து அவளின் நெற்றியில் இட்டு தானும் விபூதி குங்குமத்தை இட்டுக் கொண்டு நிம்மதியாகி அமைதியாக அமர்ந்துவிட்டான். அவனது நெஞ்சில் ஆதரவாக தலை சாய்த்தாள் நாச்சியா.
”அகத்தியா”
”ம்”
”இதை நான் எதிர்பார்க்கலை கேஸ் தேடிப்போன இடத்தில பேய்கள்கிட்ட மாட்டிக்கிட்டோமே” என்றாள் நாச்சியா கவலையாக
”இதுக்கு எல்லாம் காரணம் அந்த கமிஷனர்தான்”
”கமிஷனர் உருவத்தில இருக்கற பேய்கள்தான் காரணம்”
”எது எப்படியோ கடந்த காலத்தில என்ன நடந்ததுன்னு நாம தெரிஞ்சிக்கிட்டோம் நாச்சியா“
”அந்த கார்கோடகன் செய்த வேலையைப் பார்த்தியா, அவனுக்கு கீழவீதி மக்களை பிடிக்கலைங்கறதுக்காக அந்த ஆத்திரத்தில மொத்தமா கீழவிதி மக்கள் 100 பேரை தீயில எரிச்சிட்டு அதை ஏதோ அவார்டு வாங்கின மாதிரி பெருமையா சொல்றான் பாரேன்”
”ஆமாம் நாச்சியா அதோட விடாம அவன் உன்னையே அடைய முயற்சி செய்தான் பாரு, எனக்கு அப்படியே திக்குன்னு ஆயிடுச்சி”
”அவங்க பேசினது எப்படி உனக்கு தெரியும் நீதான் அங்க இல்லையே”
”என்னத்த இல்லை ரூமுக்குள்ள போன நானு கேஸ்பைல் கொண்டு வந்து கமிஷனர்கிட்ட கொடுத்து ஆளைவிடுங்க எங்களால இந்த கேஸ் சால்வ் பண்ண முடியாது, நீங்க