தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 28 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“ஹலோ விக்கிராந்த், நானே உங்க கிட்ட பேசனும்னு நினைச்சேன்...”
ப்ரியாவின் குரலில் ஆச்சர்யம் மட்டுமே இருந்தது என்று சொல்ல முடியாது... ஆனால் வித்தியாசமாக ஒலித்தது! மனதுக்குள் மீண்டும் மந்தகாசம் பெருக,
“என்ன விஷயம் ப்ரியா? சொல்லுங்க,” என்றான் விக்கிராந்த்!
“ஆன்ட்டி பேசினாங்க... நாளைக்கு அவங்களுக்கு தெரிஞ்ச ஒரு ஃபேமிலி சென்னை வராங்களாம், சென்னையில நடக்குற ஆர்ட் எக்ஸிபிஷன் போக ஆசைப் படுறாங்களாம், என்னை அவங்களுக்கு துணையா போய் ஹெல்ப் செய்ய சொன்னாங்க...”
அம்மா தன்னிடம் எதுவும் சொல்லவில்லையே என்று மனதினுள் நினைத்தப் படியே,
“ஏன்?” என்றான் அவன்.
“தெரியலை... ஆனால் எனக்கு ரொம்ப அன்-கம்ஃபர்டபிலா இருக்கு... என்னை பத்தி உங்களுக்கும் தெரியுமே, நான் அவங்க கிட்ட என்ன பேச, சொல்லுங்க?”
ப்ரியாவின் குரலில் இருந்த தயக்கம் அப்பட்டமாக தெரிந்தது!
அம்மாவும் அப்பாவும் எப்போதோ பேசியது காதில் விழுந்த நினைவில்,
“அம்மா சொன்ன அந்த ஃபேமிலி கனடா’ல இருந்து வந்திருக்காங்களா?” எனக் கேட்டான் அவன்.
“ஆமாம், அப்படி தான் சொன்னாங்க. உங்களுக்கு அவங்களை தெரியுமா?”
ஓ, அந்த கனடா மாப்பிள்ளை ரொம்ப சுறுசுறுப்பான ஆசாமி போலவே! கனடா மாப்பிள்ளை நியூஸ் பற்றி அவன் கேள்வி பட்டே ஒரு சில நாள் தான் ஆகி இருந்தது... அதுக்குள்ளே கனடால இருந்து கிளம்பி ப்ரியாவை பார்க்க சென்னைக்கே வந்துட்டானே!
good