(Reading time: 11 - 22 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

தொடர்கதை - திருமதி அகத்தியன் - 15 - சசிரேகா

  

நாச்சியாவின் நிலைமை படு மோசமாக இருந்தது, என்னதான் கார்கோடகனுக்கும் சங்கமேஸ்வரனுக்கும் இடையே சண்டையை மூட்டி விட்டாலும் ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்று சேர்ந்தார்கள்.

   

”சரி சரி உனக்கு உயில் கிடைக்கற வரைக்கும் நான் அமைதியா இருக்கேன், உயில் கிடைச்ச அடுத்த நொடி நான் நாச்சியாவை அடையப் போறப்ப நீ என்னை தடுக்க கூடாது“

   

என்றான் கார்கோடகன் அதற்கு சங்கமேஸ்வரனோ

   

”உயில் என் கைக்கு வந்த நொடி அதை எரிச்சி அழிச்சிடுவேன், அதோட என் ஆசை நிறைவேறிடும், அதுக்கு அப்புறம் எனக்கு இந்த உடல் தேவையில்லை என்னோட ஆத்மா  சாந்தியாகும், அதுக்கு அப்புறம் உன் விருப்பபடி நீ என்னவேணும்னாலும்  செய்துக்க” என சொல்ல அவனும் சரியென்றான். 

   

இப்போது நாச்சியாவை இவர்கள் வெறிகொண்டு தேடினார்கள் இருளான வீட்டில் பதுங்கிக் கொள்ள கூட முடியாமல் தடுமாறினாள் நாச்சியா, அந்த வீடே அவளை பயமுறுத்தியது இதில் பத்தாததுக்கு இரண்டு பேய்கள் வேறு அவளை தேடிக் கொண்டிருக்க, அவளுக்கு யோசிக்கவே தோன்றவில்லை தப்பித்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. எப்படியோ அவள் இருந்த இடத்தை மோப்பம் பிடித்தபடி வந்தான் கமிஷனர். அவளும் பார்த்துவிட்டாள், உடல் நடுங்கிவிட்டது எப்படி தப்பிப்பது என்ன செய்வது என தெரியாமல் ஓடிவிடலாம் என எண்ணி ஓடி ஒரு இடத்தில் கால் இடறி எதன் மீதோ விழுந்து கண்ணாடி உடைந்து என அந்த இடமே கலவரமாகிவிட்டது அந்த சத்தம் கேட்டு கமிஷனரும் அங்கு வந்து சேர்ந்தார்.

   

வந்தவர் அவளையும் அவள் எதன் மீது விழுந்திருந்தாளோ அதையும் பார்த்து வியந்தார்.

   

ஆண்டாள் நாச்சியாவின் போட்டோ அது, சரியாக அதன் மீது விழுந்திருந்தாள். 

   

அவளின் காலில் கண்ணாடி சில்லு குத்தி இரத்தம் வர கண்கள் கலங்கிவிட்டாள்.

   

”மாட்டிக்கிட்டியா” என கார்கோடகன் கத்த சங்கமேஸ்வரனோ அவளிடம்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.