தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 27 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“போதுமா? இன்னும் கொஞ்சம் தான் இருக்கு, சாப்பிடுங்க...”
கணவனிடம் அன்புடன் கேட்டாள் கிருத்திகா.
“முடியவே முடியாது கீர்த்தி... இதுக்கு மேல ஒரு வாய் கூட சாப்பிட முடியாது...” என்று மறுத்தான் தியாகராஜன்.
“இவ்வளவு தான் சாப்பிடுவீங்களா? ரொம்ப கம்மியா சாப்பிடுறீங்க...”
“ஏன் சொல்ல மாட்ட! இன்னைக்கு நான் சாப்பிட்டது நாலு பேர் சாப்பிடுற அளவு...”
“நான் அஞ்சு பேர் அளவுக்கு சாப்பிடுவீங்கன்னு நினைச்சேன்...”
அவளை பார்த்து செல்லமாக முறைத்தவன்,
“நீ என்னை ரொம்ப பேம்பர் செய்ற கீர்த்தி...” என்றான்.
“ஆமாம் நீங்க குட்டி குழந்தைப் பாருங்க!!! இன்னைக்கு அத்தை மாமாவை பார்க்க போனேன்...”
“தெரியும் அப்பா ஃபோன் செய்தார்... கஸ்தூரியை அம்மாக்கு உதவியா இருக்க விட்டுட்டு வந்துட்டன்னு ரொம்ப பெருமையா சொன்னார்...”
“ஆமாம், நமக்கு எதுக்கு வேலை செய்ய ஒரு ஆள்... பகல் முழுக்க நான் சும்மா தானே இருக்கேன்...”
“வீட்டுக்கு போனதுக்கு தேங்க்ஸ் கீர்த்தி... அப்பா குரல்ல அவ்வளவு சந்தோஷம்...”
“நமக்குள்ளே என்ன தேங்க்ஸ்... ஆனால் அங்கே போனதால தான் இந்த வீடு பத்தி தெரிய வந்தது... எனக்காக நீங்க ஸ்பெஷலாக கட்டினதாமே அத்தை சொன்னாங்க... அந்த வால் முழுக்க இருக்க பியூட்டிஃபுல் ஃப்ளவர்ஸ் ரொம்ப சூப்பர்ப் ஐடியா...”