”தாத்தா எதுக்கு இப்ப 6 மணின்னு டைம் பிக்ஸ் பண்ணீங்க அடுத்த நாள் விடியறவரைக்கும் சொல்லியிருக்கலாம்ல”
“ஏண்டா இதுக்கே நான் 5 நாள் டைம் கொடுத்தேன். இப்பவே மணி ஆறாக போகுது இதுவரைக்கும் வராதவளா இனி வரப்போறா பேசாம அவளை விடு” என சொல்லவும் வீட்டில் இருந்த அனைவரும் அந்த இடத்திற்கு வந்து அமர்ந்தார்கள்.
நந்தினி வராமல் போக போக ரிஷியின் கடைசி நம்பிக்கையும் ஊசலாடிக்கொண்டிருக்க அவனுக்கு காய்ச்சலே வந்து விடும் போல் இருந்தது. அவனின் முகத்தைக்கண்ட மற்றவர்களும் அவன் மீது சந்தேகித்தனர்.
சுவரில் மாட்டியிருந்த அந்தக்கால கடிகாரத்தில் ஆறாக இன்னும் 1 நிமிடம்தான் இருந்த நிலையில் அதன் பெண்டுலம் சத்தம் எழுப்ப தயாராக காத்திருந்தது. அந்த கடிகாரத்திற்குள் இருந்த சின்ன பொம்மை குருவியும் எப்படா வெளிய வந்து எட்டி பார்த்துவிட்டு போகலாம் என காத்திருந்தது. ரிஷி அந்த கடிகாரத்தையே முறைத்து பார்த்தான். அந்த குருவி மட்டும் வெளியே வந்தால் அதை சமாதி செய்யும் எண்ணத்தில் இருந்தான். அவனது முகத்தைப்பார்த்த தாத்தாவிற்கும் பாவமாகி போக அவர் அர்ஜூனுக்கு போன் செய்ய ஆரம்பித்தார்.
சரியாக அந்நேரம் அர்ஜூனும் வேகமாக உள்ளே வந்தான்
”நான் வந்துட்டேன் நான் வந்துட்டேன்” என கத்திக்கொண்டே நந்தினியை கைபிடித்து இழுத்துக்கொண்டு வாசற்படிதாண்டி உள்ளே வந்து நின்றான். அவன் வரவும் மணி ஆறாகி கடிகாரம் பெல் அடிக்கவும் ஆரம்பித்தது.
நந்தினியை கண்ட சந்தோஷத்தில் ரிஷிக்கு நிம்மதியடைந்து சோபாவில் அப்பாடா என சாய்ந்துக்கொண்டு கண்கள் மூடி ரிலாக்ஸ் ஆனான்.
இடைவேளை
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்.
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories