வெறுக்கற”
”அப்படியெல்லாம் இல்லை” என வெறுப்பாக பதில் சொல்ல தாத்தா நந்தினியிடம்
”நீ ஏன் பார்க்கற எல்லாருக்கும் பரிமாறு சாப்பிடறவங்க சாப்பிடட்டும் இல்லாட்டி போகட்டும் இந்த மாதிரி ருசியான களி சாப்பிட குடுத்து வைச்சிருக்கனும்” என சொல்லிவிட்டு திரும்பி ரிஷியை பார்த்தார். அவனிடம் தாத்தா
”டேய் இந்த மீன் கிரேவியையும் ஊத்திக்க சூப்பராயிருக்கும் பாரு” என சொல்லிவிட்டு அவனுக்கு பரிமாறவும் அவனும் சாப்பிட்டான் அமோகமாக இருந்தது.
நந்தினியும் அனைவருக்கும் பரிமாறினாள். வந்த பெண்களும் அவளது களியை சாப்பிட்டு அசந்தனர்.
அவளும் ஒரு சேரில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். வீட்டில் இருந்த மற்றவர்களும் பாட்டியை தவிர நந்தினியின் சமையலை பாராட்டினார்கள். அனைவருக்கும் அவள் நன்றி சொன்னாள்.
காலை டிபன் முடிந்தது.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்.