(Reading time: 13 - 26 minutes)

 

" யோ அண்ணா.... இந்த பொண்ணு ஏன் இப்படி பயந்து சாகுற... ரொம்ப கஷ்டம் தான் அண்ணா உன் பாடு... பேசவே இப்படி நடுங்குறாங்க... சரியான பட்டிக்காடு போல..."

" ஏய் அவ ஒன்னும் பட்டிக்காடு இல்ல... ரொம்ப பேசாத.. எனக்கு அவ பயம் தான் பிடிச்சு இருக்கு.. "

" அப்படி வா வழிக்கு... நேத்து பிடிச்சு இருக்கானு கேட்ட பொழுது அதெல்லாம்  இல்லன்னு சொன்ன... இப்போ தான உண்மை வெளில வருது... "

ஐயோயோ... ஒளறி கொட்டிட்டேன்... என்று அசடு  வலிந்தவார் மீராவை பார்த்தான்...

"ஹி ஹி..."

" பிடிச்சு இருக்கா சொல்லு அண்ணா??"

" ஹே அவ யாருனே தெரியல.. அதுக்குள்ள பிடிச்சு இருக்கானு கேட்குற... எனக்கு wife இவள மாதரி இருந்தா ஒகே.."

"அப்படியா... "  ஒகே இத எப்படி சேர்த்து வைக்கணும்னு எனக்கு தெரியும் என்று மனதுள் நினைத்து கொண்டாள்...

"வா மீரா உள்ள போலாம்.. ரொம்ப பனி கொட்டுது... "

" நீ போ அண்ணா நான் வரேன்... "

" சீக்கிரம் உள்ள வா... " என்று அஸ்வின் உள்ளே சென்று விட்டான்...

மீரா தோட்டக்காரனிடம் பேசி விட்டு திரும்பினாள்...

ஸ்ரீ வீடு!

"என்ன ஸ்ரீ ரோஸ் பறிக்க போன வெறுங்கையோட வந்து இருக்க.. " என்று பிரகாஷ் கேட்டான்..

" அது வந்து மாமா.. அங்க பறிக்க விடல.... அதான் திரும்ப வந்துட்டேன்... "

என்று பொய் கொஞ்சம் உண்மை கொஞ்சம் சொல்லி விட்டு மாடிக்கு சென்றாள்.. அங்கே அஸ்வினை பொரித்து எடுத்தாள்.. எங்க போனாலும் அங்க இவன் இருக்கான்.. முளிக்குற முளிய பாரு.. கண்ண நொண்டி காக்காக்கு போற்றுவேன் .. இனிமே அந்த வீடு பக்கமே போக கூடாது... என்று திட்டி ( ஹி ஹி அர்ச்சனை பண்ணி கொண்டு இருந்தாள்) கொண்டே உடை மாற்றினாள்.. உடை மாற்றி கீழே சென்று உணவு உண்டு படுக்க சென்று விட்டாள்...

ங்கு அஸ்வின் வீட்டில்!

       எல்லோரும் உணவு உண்டு படுக்க சென்றனர்... அஸ்வின் தன் அறைக்கு சென்று பால்கனி வழியாக அவள் தங்கி இருக்கும் வீட்டை பார்த்தான்.. அங்கு ஒரு ரூமில் லைட் எரிந்து கொண்டு இருந்தது...

இது நம்ம ஆளு ரூமாக இருக்கனும் சாமீ... என்று வேண்டி கொண்டான்... அந்த ரூமை பார்த்து கொண்டே நின்று இருந்தான்.. லைட் அணைந்து விட்டது.. ப்ச்.. யாருடா இது லைட் அமந்திரிச்சு... ( அந்த ரூம்ல ஸ்ரீ தாங்க இருக்கா.. குளிர் தாங்க முடியாம இழுத்து போத்திட்டு தூங்க போய்ட்டாங்க... நம்ம ஹீரோ  ஸ்ரீகாக வெயிட் பண்றாரு...)

அவன் புலம்பி கொண்டு இருந்த நேரம் போன் அடித்தது... கார்த்திக் பேசினான்.. அஸ்வினின் காலேஜ் தோழன்...

" டேய் அஸ்வின் எப்படி இருக்கா??"

"நான் நல்ல இருக்கேன்... நீ எப்படி இருக்க? அம்மா எப்படி இருக்காங்க??"

"பரவாஇல்லையே எங்கள எல்லாம் ஞாபகம் வச்சு இருக்க..."

" டேய் இல்லைடா... வந்ததும் உனக்கு போன் பண்ணலாம் நெனச்சேன்... பட் கொடைக்கானல் போய்ட்டு பேசலாம்னு நெனச்சேன்... நீயே கால் பண்ணிட்ட.. "

" நல்ல சமாளி.. எல்லாரும் பைன்... அம்மா தான் உன்ன கேட்டாங்க... மீரா எப்படி இருக்கா??"

" ஷி இஸ் பைன்... நான் சென்னை வந்ததும் உங்க வீட்டுக்கு வரேன்... "

" சரி டா.... அப்புறம்... வெளிநாடு போய்ட்டு வந்தருக்க... எதாச்சும் செட் ஆச்சா... "

" டேய் அங்க வேலையுக்கு போனேன்.. உன் கற்பனை குதிரைய நிறுத்து..."

" போடா சாமியார்.. உன்ன வச்சுகிட்டு... சரி ட்ரிப் நல்ல என்ஜாய் பண்ணிட்டு ஊருக்கு வந்ததும் சொல்லு... "

" சரி டா பாய்" என்று கால் கட் பண்ணி விட்டான்..  அஸ்வின் மனதுள் புலம்பி கொண்டான்.. இவன் கிட்ட அந்த பொண்ண பத்தி சொல்லலாம்.. பட் இவன் ஊதி ஊதி பெருசாக்கி வெறுப்பு ஏத்துவான்... இன்னைக்கு நைட் தூங்குன மாதரி தான்... தாவணி போட்டு வந்து ப்ச் என்னமா இருந்தா...

தாவணிபோட்ட தீபாவளி

வந்தது என் வீட்டுக்கு ..

கை மொளச்சி கால் மொளச்சி

ஆடுது என் பாட்டுக்கு

கண்ணா கண்ணா மூச்சு

ஏன் கண்ணா பின்னா பேச்சு

பட்டாம் பட்டாம் பூச்சி

என் பக்கம் வந்து போச்சு..

இரவும் வருது பகலும் வருது

எனக்கு தெரியல

இந்த அழகு சரியா மனசு

எரிய கணக்கு புரியல ..

என்று பாடலை ஹும் பண்ணி கொண்டு அவள் நினைவாக தலை அணையை முத்தம் கொடுத்து கட்டி கொண்டு உறங்க சென்றான்..

விடிந்தது!!

     ஸ்ரீ சோம்பல் முறித்து எழுந்தாள். அவளுக்கு அருகில் நேற்று கேட்டு கொண்டு இருந்த ரோஸ் இருந்தது.. கண் கசக்கி கனவா என்று பார்த்தாள்..

கீழே ஓடினாள்...

"அம்மா என் ரூம்ல ரோஸ் இருக்கு யாரு தந்த... ??"

" அதுவா காலைல ஒரு பொண்ணு வந்திச்சு.. பேரு மீரானு சொல்லிச்சு... நான் ஸ்ரீ தோழி... அவளுக்கு ரோஸ் பிடிக்கும்னு கொண்டு வந்தேன்.. அவ இல்லையா ஆண்ட்டி என்று கேட்டிச்சு... நான் நீ மாடில தூங்குறானு சொன்னேன்.. அவளே போய் பார்த்துகிரேனு மாடிக்கு போன.. உன்ன எழுப்பி விடாம வச்சிட்டு போய்டா போல!... "

ஐயோ அவ எதுக்கு இங்க வந்தா.. முருகா என்ன சோதனை இது என்று மாடிக்கு சென்றாள்...

ங்கு அஸ்வின் வீட்டில்!

  மீராவும் அஸ்வினும் வயிறு வலிக்க சிரித்தனர்.. அஸ்வின் காலை எழுந்து வாக்கிங் சென்று வந்து வெளி தோட்டத்தில் பேப்பர் படித்து கொண்டு இருந்தான்.. அப்பொழுது ஸ்ரீ வீட்டுக்கு சென்று வந்த மீரா.. அங்கு நடந்ததை சொல்லி சிரித்தாள்..

" அண்ணா உங்க ஆளு வீட்டுக்கு தான் போய்ட்டு வரேன்..." என்று சொன்ன மீராவை முழித்து பார்த்தான்.. மீராவே தொடர்ந்தாள்..

" சும்மா சொல்ல கூடாது உங்க ஆளு அமுல் பேபி தான்.. "

" ஏய் என்ன சொல்லுற... அவ வீட்டுக்கு நீ எப்போ போன.. தெளிவா சொல்லு"

" நான் காலைல ரோஸ் பறிச்சிட்டு அவுங்க வீட்டுக்கு போய் அவகிட்ட குடுக்க போனேனா.. அப்போ அவுங்க அம்மா அவ தூங்குற நீயே மாடில போய் குடுத்திட்டு வா என அவுங்க அம்மா சொன்னங்க... நானும் மாடிக்கு போனேன்... என்று சொல்லி வயிர் பிடித்து சிரிக்க ஆரம்பித்தாள்... பொறுமை இழந்த அஸ்வின்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.