13. புயலுக்கு பின் – வினோதர்ஷினி
என்ன தான் மனம் கலங்கிய போதும் சாந்தியின் குணங்களான நிதானமும் பொறுமையும் அவளை விட்டு போகவில்லை. மனதில் ஏற்பட்ட பரபரப்பை வெளியில் காட்டாமல், அருணாவிடம் தங்கள் கம்பெனி வக்கீலை சென்று பார்த்து இந்த நோட்டிஸை பற்றி சொல்லிவிட்டு, சட்டப்படி அடுத்து என்ன செய்வது என்று கேட்க சொன்னாள்.
"அப்புறம் அருணா, நம்ம ஆபீஸ் அக்கவுண்டன்ட்டு கிட்ட கொஞ்சம் நம்ம கம்பனியோட தற்போதைய கரெக்டான பைனான்ஸ் நிலை பத்தி ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ணி தர சொல்றீங்களா?
"ஓகே மேடம். நான் இப்போவே போன் பண்ணி சொல்றேன். இன்னைக்கு வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி உங்க கிட்ட எடுத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசி இருக்கேன்."
"ஓ!"
"ஒரு நிமிஷம் மேடம்..... டிரைவர் காரை அந்த ரைட் சைடில நிக்கிற பைக் பக்கத்தில் கொஞ்சம் நிறுத்துங்க..."
டிரைவர் சொன்னதை செய்தார்...