ரெஜிஸ்டர் ஆபிசில் திருமணம் நடப்பதை பற்றி தான் எதுவும் சொல்லாமலே பிரியாவிற்கு தெரிந்திருப்பதை கண்டுக் கொண்ட ராஜம், விக்கிராந்த் அவளின் முன் தான் தன்னிடம் போனில் பேசி இருக்க வேண்டும் அல்லது அவர்கள் இருவரும் முன்பே பேசி முடிவு செய்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
"அவன் சொன்னதை கேட்டப்போ முதல்ல வருத்தமா தான் இருந்தது. இப்போ யோசிச்சு பார்த்தால் அதுவே நல்லதுன்னு தோணுது"
"ஏன் அப்படி சொல்றீங்க?"
"கல்யாணம் மதுரைல நடந்தாலும் ஊர்க்காரங்க வருவாங்க. ஏதாவது பேசினால் மனசு வருத்தப்படும். அதெல்லாம எதுக்கு? விக்கி சொன்னதை போல காசை கரியாக்காமல் வேண்டிய நாலஞ்சு பேரை கூப்பிட்டு சிம்பிளா நடத்துறது தான் சரி..."
"...."
"ஏன் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்படி கேட்குறவனை பிரியாக்கு பிடிக்காது பாருங்க..."
"அடப்பாவி!"
"மம்ஸ், இன்னும் ஒரு வாரத்துல உங்க ஒரே செல்ல பையனுக்கு கல்யாணம்..."
"ஆமாம் அதுக்கு என்ன?"
"உங்க ஒரே மகனை சொந்தம் கொண்டாட ஒருத்தி வர போறா..."
"என்னடா வேணும் உனக்கு? அதை நேரா சொல்லு"