“இதப் பாரு உமா. இனி நீ தனியாள் இல்லை. நீ மட்டும்தான் இந்த வீட்டின் மருமகளாய் இருக்க முடியும். உன்னால்தான் எங்கள் குலவாரிசை சுமந்து தர முடியும். வேறு யாரையும் உன்னோட இடத்தில் ஏத்துக்க என்னால் முடியாது. என் பையனோட வாழ்க்கையை உன்கிட்ட ஒப்படைச்சுட்டேன். இனி அதை காப்பாத்த வேண்டியது உன்னோட கடமை. அதான் ஒரு மருமகளா நீ எனக்கு செய்ய வேண்டியது. நீ இந்த வீட்டுக்கு எப்படி வந்தேன்னு யோசிக்காதே. உன் குணம் பிடித்துதான் உன்னை என் மருமகளா ஏத்துக்கிட்டேன். உன்னை என் மருமகளா நினைச்சதுக்கப்புறம்தான் உன் குடும்பத்துக்கு உதவி செய்யவே ஆரம்பித்தேன். நீ அதை மனதில் போட்டு மருகிக்கிட்டு கடமையில் உன்னைக் கட்டிப் போட்டுக்காதே. உனக்கு ஒரு மருமகளாய் எல்லா உரிமையும் உண்டு. அவன் உனக்கு மட்டுமே உ
...
This story is now available on Chillzee KiMo.
...
்ச்சியுடன் பார்த்தாள் சந்தியா. எப்படியும் தன் குணத்தால் மற்றவரை அவள் ஈர்த்துவிடுவாள் என்று சந்தியாவிற்கு புரிந்தது. மனநிம்மதியுடன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள். அன்று மட்டுமல்ல. மருத்துமனையில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகும் சித்ராவை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டாள்.