22. மௌனம் எதற்கு? - ராசு
துர்காவை ஜீவகனின் குழந்தை இல்லையென்று இறுக்கமான முகத்துடன் கூறிய தூரிகாவை யாரும் குற்றம் சொல்ல முயலவில்லை. சொல்லவும் முடியாது. அவள் இடத்தில் எந்தப் பொண்ணாக இருந்தாலும் இப்படித்தான் செய்வாள்.
ஆனால் துர்கா? அந்தக் குழந்தை தாங்குவாளா? எல்லோரும் அதிர்ச்சியுடன் கவலை தோய்ந்த முகத்துடன் அவளைப் பார்த்தனர்.
துர்காவை தூக்கி அணைத்துக்கொண்ட தூரிகா யாரையும் பார்க்கவில்லை. ஜீவகனின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
“இவ நம்மோட குழந்தை.” ஆணித்தரமாக சொன்னாள்.
அவள் சொல்லி மு
...
This story is now available on Chillzee KiMo.
...
எதுக்கு வம்பு பண்றேன்? உங்க மனசுல என்னதான் இருக்கு?”
“அது ஏகப்பட்டது இருக்கு? உனக்கு என்ன வேணும்?”
“என் மேல் உங்களுக்கு என்ன கோபம்? சொல்லுங்க தப்பிருந்தா திருத்திக்கிறேன்.” கெஞ்சலாகக் கேட்டாள்.
“எனக்கு யார் மேலேயும் கோபம் இல்லே.” கூறியவன் அறையை விட்டு வெளியேறிவிட்டான்.