03. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு
ருத்ரதேவனின் தந்தை கந்தன் ஒரு வீட்டில் டிரைவராக வேலை செய்தார். தாய் கமலா. இரண்டு தங்கைகள். மூத்தவளுக்கு பேச்சு வராது. அவன் பன்னிரண்டாம் வகுப்பு பரிட்சை எழுதி முடித்த சமயம் கந்தனுக்கு இதயக் கோளாறு வந்தது. அவர் வேலை செய்யும் வீட்டில் கேட்டு அவர்களும் பண உதவி செய்தனர். இருந்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
குடும்பத் தலைவனை இழந்து விட்ட குடும்பம் தத்தளித்தது. அவன் சுமையைத் தாங்க தயாரானான். பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் மாணவனாக வந்திருந்தான். இருந்தும் அவனால் மேற்படிப்பு படிக்க இயலவில்லை. ஏதாவது வேலை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம். வேலை பார்த்துக்கொண்டே தபால் மூலமாக ஏதாவது
...
This story is now available on Chillzee KiMo.
...
ையும் கேட்டுவிட்டு அதிர்ச்சியுடன் நின்றிருந்தார்.
“அம்மா!” அதிர்ச்சிடன் கூப்பிட்டான்.
அவர் சிலை போல் நின்றிருந்தார். அவர் கை தானாக நீண்டு சாப்பாட்டை நீட்டியது. பின் திரும்பி நடக்கத் தொடங்கிவிட்டார். அவரை தொடர்ந்து சமாதானப்படுத்த முடியாமல் உள்ளேயிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.