பாக்கியத்தின் விழிகள் சுஜயாவையே வருடிக்கொண்டிருந்தன. எங்கே கண்களை மூடினால் காணாமல் போய்விடுவாளோ என்ற பயம் வேறு. தாய்மைக்காக ஏங்கிக் கிடந்த அவளது உணர்வுகளை தணிய வைத்தவள் சுஜயாதான். இப்போது அந்த குழந்தைக்கு ஒரு ஆபத்து என்ற உடன் அவளைக் காப்பாற்ற முயலாமல் இப்படி மருத்துவமனையில் வந்து படுத்துக்கொண்ட தன்னை கடிந்துகொண்டே அவர்களுடன் பேச முயன்றாள்.
அவளது மூளையின் அறிவுறுத்தலை நரம்புகள் ஏற்றுக்கொள்ள மறுத்து வேலை நிறுத்தம் செய்தன. பேச முடியவில்லை என்ற உடனே அதிர்ச்சியாய் இருந்தது. அவளின் அதிர்ச்சியை உணர்ந்த சுஜயா ஆறுதலுடன் பாக்கியத்தின் கரத்தைப் பற்றிக்கொண்டாள். பாக்கியத்திற்கு கைகால்களை அசைக்க முடியவில்லை என்று தெரிந்ததும் மேலும் அதிர்ச்சியானது. கணவனுக்கு பாரமாகிப்
...
This story is now available on Chillzee KiMo.
...
்குள் ஒரு சந்தேகம் இருந்தது.
‘டாக்டர் அவ மனசில் ஏதோ கவலை இருக்குன்னு சொன்னாரே. ஒருவேளை அது சுஜயாவைப் பற்றியதுதானோ? அதுதான் அடிக்கடி அவளையே தேடுகிறாளோ? அப்படி என்ன பிரச்சினை சுஜயாவுக்கு? யாருக்குமே தெரியாத ஒன்று பாக்கியத்துக்கு மட்டும் எப்படி தெரிந்திருக்கும்?’ கவலையில் தொய்ந்துபோனார்.