ஈராண்டு கழித்து...
"கீதா செல்லம்..!இங்கே பாருங்க..அப்பாவை பாருங்க..!"-ராகுலின் குரலை கேட்டு புன்னகைத்தாள் அவனது புதல்வி.
"என்ன வேணும் என் செல்லத்துக்கு!அப்பா உங்களை வெளியே கூட்டிட்டு போகட்டா?"
"...................."
"தாத்தா பாட்டியை பார்க்க போகலாமா?எப்போ போகலாம்?"
"ம்...நீங்க முதல்ல வேலைக்கு கிளம்பலையா?"-சமையலறையில் இருந்து குரல் வந்தது.
"நான் இன்னிக்கு லீவு!"-தீக்ஷா சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தாள்.
"என்ன லுக்கு?நான் இன்னிக்கு என் அம்மூக்குட்டியோட ஊர் சுற்ற போறேன்!"
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
"சரிதான்...!அப்பா எப்போ வரேன்னு சொன்னார்?"
"கேஸ் விஷயம் இழுத்தடிக்குதாம்..!எப்படியும் ஒரு மாதம் ஆகும்!"
"சரி..நீங்க போய் குளிச்சிட்டு வாங்க!"
"ம்..கொஞ்ச நேரம் கழித்து போறேன்!"-என்று தன் மகளோடு விளையாட ஆரம்பித்தான்.
"என் அம்மாவா நீங்க?வாங்க..!அப்பா உங்களை வெளியே கூட்டிட்டுப் போறேன்!"-கீதா தவழ்ந்தப்படி வந்து அவன் மடி மீது விழுந்தாள்.
"சரி...போதும் என் செல்லத்துக்கு கால் வலிக்கும்ல!"-குழந்தைக்கு குழந்தையாக மாறிப்போன தனது கணவனின் குழந்தைத்தனத்தை சமையலறையில் இருந்து கண்ணீரோடு ரசித்துக்கொண்டிருந்தாள் தீக்ஷா!!!
பல ஆண்டுகளுக்கு முன் அவன் பிரிந்த அவனது ஆனந்தம் இன்று மீண்டும் அவனிடமே கரம் சேர்ந்ததை அவனது தொலைந்துப் போன குழந்தைத்தனம் வெளிப்படுத்தியது.
ஒரு ஆணாகப்பட்டவன் தனது குழந்தைத்தனத்தை இருவரிடம் மட்டுமே தன்னையறியாமல் வெளிப்படுத்துவான்.ஒன்று அவன் தாயிடம்!அடுத்து,அவனது புதல்வியிடம்!!என்ன சொல்வது??
ஒவ்வொரு ஆணும் தனது புதல்வியை தன் தாயின் மறுப்பிறப்பாய் எண்ணுவதை..!அவனறியாமல் அந்த பச்சிளம் குழந்தையிடம் அவன் வெளிப்படுத்தும் மரியாதை அதனை வெளிப்படுத்தும்..!!
ஆண்களுக்கும் மனயெழுச்சிகள் உண்டு!!ஆனால் அதனை அவர்கள் அதிகமாக தாயின் மடியிலும்,மகளின் அருகிலுமே வெளிப்படுத்துகிறார்கள்!!
இன்னும் யாரையோ கண்டுக்கொள்ளாமல் விட்டோம் அல்லவா??ஸ்ரீதர்...!!
இனி சதிக்கு ராகுலின் துணை இருக்கிறது நாம் கவலைக்கொள்ள வேண்டியதில்லை!!!பயணம் முடிந்தது!!விடைப்பெறுகிறேன்!!!
முற்றும்!
{kunena_discuss:877}