(Reading time: 30 - 59 minutes)

22. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

Kadalai unarnthathu unnidame

"நீ இப்படி செய்வேன்னு நான் நினைக்கல தேவா... நீ என்னை ஏமாத்திட்ட...  எவ்வளவு நம்பினேன் உன்னை... நீ ஒரு சீட்... சே உன்னைப் பார்க்கவே புடிக்கல... " என்று கோபமாக தேவாவை பார்த்து கவி பேச... என்ன சொல்வது என்று தெரியாமல் தேவா முழித்துக் கொண்டிருக்க...

மழைக் காரணமாக வெளியில் இருந்து உள்ளே எடுத்துக் கொண்டு வந்து போட்டிருந்த கயிற்று கட்டிலில்... குத்தக் காலிட்டு அதில் முகத்தை வைத்துக் கொண்டு அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் யுக்தா...

கவி திட்டுவதற்கு தேவா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருப்பதைப் பார்த்து சிரிப்பாக வந்தது தாத்தாவுக்கும் பாட்டிக்கும்... தாத்தா கொஞ்சம் சத்தமாக சிரித்துவிட...

"என்ன சிரிப்பு வேண்டியிருக்கு தாத்தா... நீங்களும் இதுல கூட்டு இல்ல... நீங்கல்லாம் இப்படி செய்வீங்கன்னு நான் நினைக்கல தாத்தா.. " என்று கோபப்பட்டாள் சங்கவி...

பின்னே சம்யூ பற்றி எந்த தகவலும் தெரியாமல் அவஸ்தை பட்டு கொண்டிருந்தவள்... கொஞ்சம் மன அமைதிக்காக இங்கே வர முடிவெடுத்தாள்... இங்கே வந்தவள் வீடு திறந்திருந்தாலும் கதவை தட்டிவிட்டு காத்துக் கொண்டிருக்க... உள்ளிருந்து வந்த சம்யூவை பார்த்து அதிர்ந்தாள் என்றால்... "யுக்தா பாட்டி உன்னை கூப்பிட்றாங்க.." என்று பேசிக் கொண்டு வந்த தேவாவை பார்த்ததும்... அப்படியே கையிலிருந்த பேகை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியே போனாள்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

தேவாவும் யுக்தாவும் கவியை பார்த்து அதிர்ந்தனர்... அவள் இங்கே வருவதாக தேவாவிடம் சொல்லவில்லையே.. முதலில் அதிர்ந்தவன் பின் கோபமாக சென்ற அவளை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து வந்தான்... அப்போதே அவனை திட்ட ஆரம்பித்துவிட்டாள்... இதில் தாத்தாவும் பாட்டியும் இதில் சம்பந்தப்பட்டிருப்பர் என்று தெரிந்ததும் இன்னும் கோபம் வந்தது அவளுக்கு...

அவள் கோபமாக பேசியதும் பாட்டியோ... "இல்லம்மா நாங்க எவ்வளவோ சொன்னோம்... ரெண்டுப்பேரும் கேக்கவேயில்லை.." என்றதும் தேவா அவன் பாட்டியை பார்த்தான்...

"யுக்தாக்கு சப்போர்ட்டா என்கிட்ட அவ்வளவு பேசிட்டு.. இன்னைக்கு ப்ளேட்டையே மாத்திப் போட்றதை பாரு..." என்று மனசுக்குள் திட்டிக் கொண்டு பாட்டியை முறைக்க... சும்மா என்று குரலெழுப்பாமலே வெறும் வாயை மட்டும் அசைத்து கண்ணடித்தார் அவர்...

"அய்யோ ஸ்டார்டிங்கே இவக்கிட்ட மாட்டிக்கிட்டோமே... இவளே இப்படி திட்றா... இன்னும் மத்தவங்கல்லாம் எப்படி திட்டப்போறாங்களோ என்று தேவா பயந்தான்...

"இப்போ தாத்தா பாட்டிக்கிட்ட ஏன் கோபமா பேசனும்... நான் தான் யார்க்கிட்டேயும் சொல்ல வேண்டாம்னு சொல்ல சொன்னேன்.." என்றாள் யுக்தா...

அவள் பேசியதும் கோபமான கவியோ... "என்கிட்ட அவளை பேச வேணான்னு சொல்லு தேவா... எனக்கு இன்னும் அவ மேல இருக்க கோபம் குறையல... இப்போ இன்னும் அதிகமாகத்தான் ஆகியிருக்கு..." என்றதும்...

"நான் ஒன்னும் அவக்கிட்ட பேசலன்னு சொல்லு தேவா..." என்றாள் யுக்தா..

"சங்கு முதல்ல கோபத்தை கன்ட்ரோல் பண்ணிட்டு...  நான் என்ன சொல்றேன்னு கேளு..." என்று தேவா கவியை சமாதானப்படுத்த முயல...

"நீ எதுவும் சொல்ல வேண்டாம்... நான் எதுவும் கேக்க தயாரில்ல... நான் சித்தப்பா சித்திக்கு போன் போட்டு இவ இங்க இருக்கப் போறத சொல்லப் போறேன்.. இவளை முதல்ல சென்னைக்கு வரச் சொல்லு... அவங்களும் நியூயார்க்ல இருந்து கிளம்பி வருவாங்க... அப்புறம் எல்லாம் பேசிக்கலாம்..."

"இல்லை தேவா நான் இப்போ சென்னைக்கு வரப் போறதில்ல... நான் இன்னும் கொஞ்ச நாள் இங்கத்தான் இருக்கப் போறேன்... அப்பா அம்மாக்கிட்ட இப்போ எதுவும் சொல்ல வேணாம்னு அவக்கிட்ட சொல்லு தேவா..."

"அங்க அவங்க இவளை காணும்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்காங்க....அதனால முதல்ல இவளை சென்னைக்கு வரச் சொல்லு..."

"இல்லை நான் வரமாட்டேன்... கொஞ்ச நாள் இங்கத் தான் இருக்கப்போறேன்..."

ரெண்டுப்பேரும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்க... தேவாவின் நிலையை பார்த்து சிரிப்பு வந்தது தாத்தா பாட்டிக்கு...

"தேவா நீ என்னோட பேச்சை தானே கேப்ப... அப்போ அவளை சென்னைக்கு வரச் சொல்லு..." என்று கவி கேட்க...

"தேவா நீ என் பேச்சை தானே கேட்ப... நான் இப்போ சென்னைக்கு வர மாட்டேன்னு சொல்லு..." என்று யுக்தா கூறினாள்...

என்ன சொல்வது என்று புரியாமல் தேவா திருதிருவென்று விழிக்க... "என்ன தேவா அவளை இப்போ சென்னைக்கு வரச் சொல்லப் போறீயா இல்லையா.." கவி கேட்டதும்... "நான் இப்போ வரப் போறதில்லன்னு சொல்லு தேவா..." என்றாள் யுக்தா...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.