குறும்புடன் நான் சிரிக்கிறேன்..
நீயும் நானும் அதிகமாய் செலவளித்த நொடிகள் எல்லாம்
தோசை வார்ப்பதற்குத்தானே?
இல்லாத பசியை இருப்பதாய் பொய்க்கூறி
“இன்னும் ஒரே ஒரு தோசை கிடைக்குமா?” என்ற வசனத்திலேயே
காதல் வளர்த்தோமே நாம் !
“ என்னுடைய கெட்ட நேரம்,
சுமாரான உங்கம்மாவை கட்டிக்கிட்டேன்”
வாய்க்கூசாமல் பொய் உரைக்கிறாய்..
நான் அதைகேட்டு வஞ்சனை இல்லாமல் காதல் வளர்க்கிறேன்..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
என்னவனே, முதுமை எட்டி பார்க்கத் தொடங்கிவிட்டது எனக்கு..
முகத்தில் இளமை குறைய தொடங்குகிறது,
நரையும் எட்டிப் பார்க்கிறது,
மூக்குக்கண்ணாடியின் அளவும் பெரிதாகியது,
என் முகம் காண நானே சோர்ந்தாலும்,
ஒவ்வொரு இரவும் நான் உறங்கிவிட்டதாய் எண்ணி
என்னை ரசித்து முத்தமிடும் உன்னையும்
உன் காதலையும் உணராமல் போய்விடுவேனோ?
“ அவ கிடக்கிறா விடு” என்று
மற்றவர் எனக்கு தரும் ஆதரவை உடனே உடைக்கிறாய்..
நீ சுயநலத்தோடு அதட்டுவதாய் பிறர் நினைக்க
எனக்கு மட்டுமே புரியும் உன் எண்ணம்..
எப்போதும் எனக்கு இருக்கும் ஒரே ஆதரவு
நீயாய் மட்டுமே இருக்கவேண்டுமென
நீ விரும்புவதை உணர்கிறேன்..!
“அழுது சீன் போடாதே” என்று எரிச்சலாய் கூறுகிறாய்..
என் கன்னங்களை நனைக்கும் கண்ணீர்
உன் நெஞ்சத்தை சுட்டெரிப்பதால் தான்
இப்படி கோபமாய் நடிக்கிறாய் என்பதை அறிகிறேன் ஆருயிரே..!
என்னவனே,
உன்னை நான் நேசித்தப்போது,
நீ மட்டுமே எனக்கு அழகானாய்..ஆனால்,
நீ என்னை நேசிக்கத் தொடங்கியதும்
என் முழுஉலகமே அழகாய் மாறிப்போனது..
எதைத் தொடங்கினாலும்
அதில் உன் அக்கறையை காண்கிறேன்!
எது முடிந்து போனாலும்
அதில் உன் ஆறுதலைப் பெருகிறேன்!
தோற்று விழும்போதெல்லாம்
தோளில் சாய்த்துக்கொண்டு என் தோழனாகிறாய்
மகிழ்ந்து வென்றிடும்போதெல்லாம்
மடியில் சாய்ந்துகொண்டு என் மழலையாகிறாய்!
சிலநாள் என்னை வென்று
கர்வம் காட்டுகிறாய்
சிலநாள் என்னிடம் தோற்று
சொர்க்கம் நீட்டுகிறாய்..!
வாதமாய் தொடங்கினாலும்,
பிடிவாதமாய் கெஞ்சினாலும்,
தன்னிலை மாறாமல்,
என்னிலையும் தோயாமல்,
துன்பம் தீர்த்து இன்பம் தருகின்ற
இனியவன் நீ ..!
காலை எழுந்ததுமே உன் முகம் தேடுகிறேன்
மாலை வந்ததுமே உனை காண ஓடி வருகிறேன்
“ ஏன் இவ்வளவு அவசரம் ? வீட்டு வேலையை எல்லாம்
நீதான் கவனிக்கனுமோ?” என்று பிறர் கேட்கும்போதெல்லாம்
மௌனமாய் சிரிக்கிறேன்..
எனக்கு மட்டுமே புரிந்த,
உன் விழிகள் பேசிடும் ரகசியம் பாஷையது!
ஒவ்வொரு நாளும் வீடு வந்த நீ, என்னைத்தேடுவாய்..!