“என்ன அமைதியா இருக்குறீங்க… பதில் சொல்லுங்க…”
“………….”
“யோசிச்சு தான் கிளம்புவாராம்?... யோசிச்சு… சும்மா என்னை சமாளிக்க எதாவது சொல்லாதீங்க சரியா?...” என்றவள்,
அவன் எதுவும் பேசாமல் இருப்பதை கவனித்துவிட்டு, அவனையே சற்று நேரம் பார்த்தாள்…
அந்த நேரம் அவனுக்கு ஒரு போன் கால் வர,
“ஹலோ… ஜெய் ஹியர்…” என்றபடி பேச ஆரம்பித்தவன், இடையில் எதிர்முனையில் இருப்பவரிடம் லேசாக புன்னகைக்க, இங்கே அவள் கொண்ட கோபம் அனைத்தும் மறைந்தே போனது…
“சிரிக்கும்போது தான் எவ்வளவு அழகா இருக்குறீங்க?... ஆனா சிரிக்குறதே கிடையாது… ம்ம்….” என அவள் மனதினுள் சொல்லிக்கொள்ள, அவன் பேசிமுடித்துவிட்டு போனை டேபிளில் வைத்தபோது அவள் பார்வை அவனை குற்றஞ்சாட்டியது…
“எனக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்யுறீங்க ஜெய் நீங்க ரொம்பவே…”
அவளது பேச்சு புரியாமல் அவன் “என்ன?....” என்பது போல் பார்க்க,
“பின்ன என்ன?... எங்கிட்ட மட்டும் சிரிக்கவே மாட்டிக்குறீங்க?... மத்த எல்லார்கிட்டயும் பேருக்குன்னாலும் சிரிக்குறீங்க?... இதெல்லாம் உங்களுக்கே ஓரவஞ்சனையா தெரியலையா ஜெய்?... பாவம் பார்த்து ஒரு சின்ன ஸ்மைல் கொடுத்தா தான் என்னவாம்?...”
அவள் சிறுகுழந்தை போல் முகத்தை வெட்டிக்கொண்டு பேச, அவன் அதில் தன்னை தொலைத்தான் முற்றிலுமாய்…
“லவ் பண்ணுறாளே விழுந்து விழுந்து… அட்லீஸ்ட் அதுக்காகன்னாலும் கொஞ்சம் சிரிச்சு தொலைச்சா சந்தோஷப்படுவாளேன்னு தோணுதா உங்களுக்கு?... எப்பப் பாரு என்னைப் பார்க்கும்போது மட்டும் அப்படியே அந்த சிரிப்பை உதட்டுக்குள்ளேயே புதைச்சிக்கிறது…. எங்க இருந்து தான் கத்துக்கிட்டீங்களோ இதை… தெரியலை…”
அவளின் ஆதங்கத்துடன் கலந்த காதல் வெளிப்படையாகவே பேச்சில் தெறிக்க, அவன் அவள் சொன்னதுபோல் தனது புன்னகையை இம்முறையும் சற்று அதிகமாகவே உதட்டுக்குள்ளே புதைத்துக்கொண்டிருந்தான்…
“பாரு… காட்டுக்கத்து கத்துறாளே… அதுக்காகவாச்சும் பாவம் பார்த்து ஒரு ஸ்மைல் செய்வோம்னு தோணுதா?... தோணாது உங்களுக்கு…” என அவள் உதட்டை சுழித்து கன்னத்தில் கைவைத்து முகத்தை உர் என்று வைத்துக்கொள்ள, அவனுக்கோ இம்முறை சிரிப்பை கட்டுப்படுத்துவது பெரும்பாடாக இருந்தது…
“நான் உங்களை லவ் பண்ணுற பொண்ணு ஜெய்… எங்கிட்ட சிரிச்சு பேசுறதுல என்ன பிரச்சினை உங்களுக்கு?...”
“உங்கிட்ட நான் முன்னாடியே சொல்லிட்டேன்… இதெல்லாம் வேண்டாம் விட்டுடுன்னு…”
அதுவரை அமைதியாக இருந்தவன் வாய்திறந்து பேசிவிட, அவள் தனது தலையில் கைவைத்துக்கொண்டாள்…
“ஆரம்பிச்சிட்டீங்களா?... என்னடா இன்னும் இந்த வார்த்தை வரலையேன்னு பார்த்தேன்… வந்துட்டு… சூப்பர்…” என மெதுவாக அவள் கைத்தட்டிக்கொள்ள, அவன் உதட்டின் ஓரம் புன்னகை எட்டி பார்த்தது…
அந்த நேரம் அதனை கவனிக்காமல் போனாள் அவள்…
அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக, அவள் மெதுவாக நிமிர்ந்து அவனை பார்த்தாள்…
“என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கு தான?...”
அவள் கேட்டதும், எதையோ சொல்ல வாயெடுத்தவனை தடுத்தவள்,
“இல்லன்னு எதாவது குதர்க்கமா சொன்னீங்க… அப்புறம் நான் பத்திரகாளி ஆகிடுவேன்… சொல்லிட்டேன்….” என மிரட்டியவள்,
“உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும்… நம்ம பர்ஸ்ட் மீட்டிங்கிலேயே நான் அதை தெரிஞ்சுகிட்டேன்… அதை இல்லன்னு உங்க நடவடிக்கை தான் இத்தனை நாள் என்னை குழப்பிட்டு… பட் அதையும் அந்த பைரவ் புண்ணியத்துல தெரிஞ்சிகிட்டேன்… தேங்க் காட்… அவன் மட்டும் அன்னைக்கு என் கழுத்துல கத்தி வைக்கலையோ, நீங்க என் மேல வச்சிருக்கிற காதலை கடைசி வர எனக்கு தெரியாமலே மறைச்சிருப்பீங்க…” என மூச்சை இழுத்து வெளிவிட்டுக்கொண்டு அவள் சொல்ல, அவன் பார்வை அவளை விட்டு எங்கும் அகலவில்லை…
“நீயா கற்பனை பண்ணிக்காதன்னு உனக்கு எத்தனை தடவை தான் நான் சொல்லுறதுன்னு எனக்கே தெரியலை… தேவை இல்லாம நீயா ஒரு அர்த்தம் எடுத்துக்கிட்டு கஷ்டப்படாத… அவ்வளவுதான் என்னாலயும் சொல்லமுடியும்… அதுக்கும் மேல உன் விருப்பம்…” என சற்று நீளமாக அவன் பேசிவிட்டு தோளைக்குலுக்க, அவள் அவனை இமைக்காமல் பார்த்தாள்…
“என்ன….” என்பது போல் அவன் புருவம் சுருங்கியபோது,
“கற்பனை நானா பண்ணிக்கிறேனா?... அப்படியா?... அப்போ நம்ம பர்ஸ்ட் மீட்டிங்கில் நடந்தது கூட கற்பனைதான் இல்ல?....” என அவள் தன் பார்வையை அவன் விழிகளில் பதித்து கேட்க, அவனும் அவள் விழிகளை சந்தித்தான்…
இல்லை என பதில் சொல்லிட மனம் நினைத்தென்னவோ உண்மைதான்… ஆனால் உதடு அதற்கு வழிவிட்டால் தானே…
எப்படி சொல்லிடமுடியும் அவனால் பொய்யாக இல்லை என?...
அன்று நடந்த நிகழ்வை அவனால் மறந்திட முடியுமா என்ன?...
ஒருநொடியில் துடித்து தவிக்கவிட்டவளல்லவா அவள்?... அதை இல்லை என மறுத்திடுவானா என்ன அவன்?....
{kunena_discuss:1001}