(Reading time: 27 - 54 minutes)

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா
மார் உதைக்கும்கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே

சிறிது நேரத்தில் பரணி சாக்ட்சி தன்வி அனைவரும் மகியை பார்த்துவிட்டு மண்டபத்திற்கு சென்றனர்..அமர்நாத் அவர்களை அமர்நாத் பவனிற்கு அழைக்க,பரணி வாய் திறக்கும் முன் சாக்ட்சி,தாத்தா தப்பா எடுத்துக்காதீங்க நா பரணி வீட்டுக்கே போறேன்..நாளைக்கு காலைல விருந்துக்கு வரோம்..இனி எஸ்.எம் குரூப்ல நானும் ஒரு எம்ப்ளாயி..அதர்வா அங்கிள் வர வர உங்களுக்கு உதவியா நா வேலை பாக்குறேன்..மத்தபடி எனக்கும் அந்த சொத்துக்கும் எந்த சம்பந்தமுமில்ல..ப்ளீஸ் தாத்தா எனக்கு அந்த லைப் தான் பிடிச்சுருக்கு என அவர் தோளில் சாய்ந்து கொள்ள பரணியோ கரைதாண்டிய காதலோடு பார்த்தான் அவளை..அமர்நாத்திற்க்கோ தன் வளர்ப்பை நினைத்து பெருமையாய் இருந்தது பரணியை பற்றி தெரியும் என்பதால் அவரும் எதுவும் மறுப்புகூறவில்லை..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

தன்வியும் ராஜியும் சேர்ந்து பரணியின் வீட்டில் அன்றைய இரவுக்கான ஏற்பாடுகளை செய்து சாக்ட்சியையும் தயார் செய்து உள்ளே அனுப்பி வைத்தனர்..எக்கச்சக்க எண்ணங்களோடு உள்நுழைந்தவள் பரணியின் கவலையான முகம் பார்த்து பயந்து விட்டாள்..

என்னாச்சு பரணி??ஏன் ஒருமாறி இருக்கீங்க..

உன் முடிவுல உனக்கு சந்தோஷமா சாக்ட்சி??

எதபத்தி கேக்குறீங்க??

தாத்தாகிட்ட பேசினத தான் கேக்குறேன்..நீ வசதியா வளந்தவ எனக்காக இப்படி ஒரேடியா கஷ்டபடனுமா??கொஞ்ச நாள் வேணா அங்கேயே இருந்துடலாமா நாம ரெண்டு பேரும்..

என்னப்பா ஆச்சு உங்களுக்கு..அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..எனக்கு நீங்க தான்னு முடிவு பண்ணப்பறம் உங்ககிட்ட இருக்குறத வச்சுதான் வாழணும் அதவிட்டுட்டு அங்க போய் இருக்குறது என் புருஷனுக்கு நா பண்ற அவமானம்..ஏன் இப்படி தேவையில்லாம ஏதோ யோசிச்சுட்டு இருக்கீங்க??

லவ் யு சாக்ட்சி..என அவள் கரத்தை தன் நெஞ்சின் மீது வைத்து கொள்ள,ஹப்பாபா இத்தன நாள்ல இப்போவாவது லவ்வ சொல்லனும்னு தோணிச்சே,.என்று கூறி அழகாய் சிரிக்க,அவர்களின் இல்லறமும் இனிமையாய் தொடங்கியது..

தினைந்து நாட்களுக்கு பிறகு,

மகி ரெடியா??எவ்ளோ நேரம்..குட்டி பையன் ஸ்கூல்க்கே போய்டுவான் போல நீ பேர் வைக்குறதுக்குள்ள..வா சீக்கிரம் என தன்வி வெளியிலிருந்து குரல் கொடுக்க,

ராம் மானம் போகுது விடுங்கப்பா..

ஹே இருடீ ரொம்ப தான்..இன்னைக்கு என்ன ஆனாலும் நா விடுறதாயில்ல..ஒரு IPS ஆபீஸருக்கே தண்ணி காட்டுது விட்டுருவோமா..

தலையில் கை வைத்து நின்று கொண்டிருந்தாள் மகி..கடந்த அரைமணி நேரமாக அவளுக்கு புடவை கட்டி விடுகிறேனென்று அவளை பாடாய்படுத்தி கொண்டிருந்தான்..சற்றே பொறுமையிழந்தவள் ராமிடமிருந்து விலகி சட்டென ரெடியாகி அவனையும் இழுத்து கொண்டு வெளியே வந்தாள்..அங்கு அவர்களின் ஜுனியர் ஏற்கனவே ரெடியாகி பாட்டியிடம் சமத்தாய் உறங்கி கொண்டிருந்தான்..ஐயர் ராமிடம் குழந்தைக்கான பெயரை கேட்க அவன் மகியை பார்த்தான்..அவனுக்குத் தெரியும் நிச்சயம் மகியிடம் இதற்கு விடையிருக்குமென்று..ஆசையாய் தன்னவனை பார்த்தவாறே பெயரை கூறினாள்..”க்ருஷ்”..அனைவரும் குழந்தையின் பேரை கூறி அழைக்க அனைவருக்கும் பிடித்தும் போனது..

ரவு சில வேலைகளை முடித்துவிட்டு ராம் அறைக்கு வர தாமதமாக மகி இன்னுமும் உறங்காமல் வானத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்..ஹே குட்டிமா இன்னும் தூங்கலயாயென பின்னிருந்து அவளை அணைத்து அவள் கழுத்தில் முகம் பதித்தான்..

ஏன்ப்பா நீங்க எதுவுமே நேம் செலக்ட் பண்ணலயா??ஏன் என்னையே சொல்ல சொன்னீங்க??

இததான்இவ்ளோ சீரியஸா யோசிச்சுட்டு இருக்கீங்களா மேடம்??

ம்ம்ம்..சொல்லுங்க???

ம்ம் இதென்ன பெரிய விஷயம்,பத்து மாசம் கஷ்டபட்டு சுமந்து,உயிர் போற வலிய அனுபவிச்சு அவன பத்திரமா இந்த உலகத்துக்கு கொண்டு வர தெரிஞ்ச உனக்கு அவனுக்கு பேர் வைக்க தெரியாதா என்ன??அதான் உன்கிட்டேயே பொறுப்ப குடுத்துட்டேன் என மென்மையாய் அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்…

அவள் அவனிடம் ஏதோ கூற வர,நீ போலீஸ்காரன் பொண்டாட்டி தான் அதுக்காக கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே இருக்காத..போய் ஒழுங்கா படுத்து தூங்கு..உடம்பு தேற வேண்டாமா..முன்னையாவது என்ன மட்டும் பாத்துகிட்ட இப்போ இன்னோருதர வேற பாக்கனுமே அதுக்கு நீ தெம்பா இருக்கனும் வந்து படு..ராமின் இதயதுடிப்பை கேட்டு கொண்டே தூங்கியும் போனாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.