(Reading time: 23 - 46 minutes)

'ன்??? ஏன்??? என்ன நினைத்து இந்த கண்ணீர்??? அவன் யோசிப்பதற்குள் அங்கிருந்து விலகி சென்றிருந்தாள் அபர்ணா. தளர்ந்தே போனான் பரத்.

இன்னும் இரண்டு மணி நேரங்கள் கடந்திருந்தன.

'இன்னும் மாப்பிள்ளை வீட்டிலே இருந்து யாருமே வரலையே???' கவலையாக ஒலித்தது அபர்ணா அப்பாவின் குரல். மத்தியானத்திலிருந்து போன் பண்றேன் அருணும் எடுக்கலை. அவங்க அப்பாவும் எடுக்கலை..'  வேறொரு அறையில் அம்மாவிடம் சொல்லிகொண்டிருந்தார் அப்பா.

'வண்டி அனுப்பி இருக்கீங்க இல்ல வந்திடுவாங்க. தேவை இல்லாம டென்ஷன் ஆகாதீங்க. அபர்ணாவுக்கு தெரிஞ்சா அதுவும் கவலைப்படும்..' என்றார் அம்மா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அதே நேரத்தில் அந்த மண்டபத்தின் யாருமில்லா ஒரு அறையில் நின்றிருந்தான் பரத்.

'என்ன மாப்பிள்ளை சார் ரிசப்ஷனுக்கு ரெடி ஆகலையா???' அஸ்வினி அவனை தேடி வந்து வம்பிழுக்க

'சும்மா இரும்மா கொஞ்ச நேரம்...' என்றான் சட்டென. 'உங்க அக்காவை என்னாலே நிமிர்ந்து கூட பார்க்க முடியலை..'

'பச் .. எங்க அக்காவிட மோசம் நீங்க... முடிவு பண்ணி இறங்கியாச்சில்ல. எல்லாம் சரியா நடக்கும்.. குழப்பிக்காதீங்க..' அவள் சொல்ல சில நொடிகள் பேசாமல் நின்றவன், மெல்லக்கேட்டான்

'நான் தாலி கட்டும் போது உங்க அக்கா அழுவாளா அஸ்வினி???'

'ஆமாம் அழுவா..' என்றாள் பட்டென. உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா ரெண்டு மூணு நாள் அழுவாளா இருக்கும். அதோட எல்லாம் சரியா போகும். ஆனா அந்த அருணை கல்யாணம் பண்ணிக்கிட்டா காலம் முழுக்க அவ அழணும் ஞாபகம் வெச்சுக்கோங்க. .உங்களை விட அவளை யாருமே நல்லா பார்த்துக்க முடியாது புரிஞ்சுக்கோங்க.' சொல்லிவிட்டு வெளியேறினாள் அறையைவிட்டு!!!

கவனிக்கவில்லை அவர்கள்.!!! இவர்கள் பேசிய அந்த கடைசி இரண்டு வரிகள் அங்கே தற்செயலாக வந்த அபர்ணா அம்மாவின் காதில் விழுந்ததை உணரவில்லை அவர்கள்!!!

அதிர்ந்து போய் நின்றிருந்தார் அவர்!!! என்ன செய்து வைத்திருக்கிறார்கள் இந்த பிள்ளைகள்??? தாலி கட்டப்போவது பரத்தா??? இதை தனது கணவரிடம் சொல்வதா வேண்டாமா???

அதே நேரத்தில் அங்கே வாசலில் வந்து நின்றது மாப்பிள்ளை வீட்டார் வருவதேற்கென அவள் அப்பா அனுப்பி வைத்த வேன்...

'மாப்பிள்ளை வந்திட்டார் போல.. ஆரத்தி எடுத்திட்டு வாங்க... ' என்று ஒலித்த குரல் பரத்தின் செவிகளை அடைய திடுக்கிட்டு திரும்பினான் அவன்.

'எல்லாவற்றையும் மீறி அருண் வந்து விட்டானா என்ன???

Episode # 15

Episode # 17

தொடரும்......

{kunena_discuss:982}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.