இருப்பினும் தவிப்பு!!! இரண்டு நொடிக்கு ஒரு முறை அவள் முகத்தை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே இருந்தான் பரத். விழிகளை தாழ்த்திக்கொண்டு நிலம் பார்த்து அமர்ந்திருந்தாள் அபர்ணா.
'அட போதும்டா... தாலி கட்டிட்டு அப்புறம் பாரு அவளை...' இது அவன் அப்பா பின்னாலிருந்து!!!!
சின்னதாய் சிரித்துக்கொண்டான் அவன். அவன் மனநிலை யாருக்கும் புரிய வாய்ப்பில்லை.
மழை கொட்டிக்கொண்டிருந்தது வெளியே!!! சொட்ட சொட்ட நனைந்து போனவானாய் பறந்து வந்துக்கொண்டிருந்தான் அருண். இன்னும் ஐந்து நிமிடங்களாவது எடுக்கும் மண்டபத்தை நெருங்க!!!
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
வந்திருந்த பெரியவர்களிடம் ஆசி வாங்க தாலியை எடுத்துக்கொண்டு இறங்கினாள் அஸ்வினி. தடதடத்து கொண்டிருந்தது பரத்தின் இதயம்
இதோ, இதோ தாலி கட்டப்போகிறான் பரத்.!!! புரிந்த போதும் எந்த விதமான பெரிய அழுத்தமும் இல்லாமல் துளியிலும் துளி கூட சலனமும் இல்லாமல் துடைத்து வைத்த கண்ணாடியாய் இருந்தது அபர்ணாவின் மனம்.
.இத்தனை முறை அவன் திரும்பி திரும்பி தன்னை எதற்காக பார்க்கிறான் என்பது கூட புரியாத பெண்ணில்லை அவள். இப்போது அவனுடைய தேவை என்ன என்பது நன்றாகவே புரிகிறது அவளுக்கு. சில நொடிகள் கண்களை மூடிக்கொள்கிறாள் அவள்.
'இப்போ இல்லை..... வாழ்கையிலே எப்பவுமே நான் உனக்கு என்ன செய்யறேனோ இல்லையோ.... உன் கண்ணிலே தண்ணி மட்டும் வர விட மாட்டேன் கண்ணம்மா..' அவனது பழைய வார்த்தைகள் இப்போது அவள் நினைவில்.
அது மட்டுமே இப்போது அவளுக்குள் திரும்ப திரும்ப சுழல்கிறது. தாலி வந்துவிட்டிருந்தது மேடைக்கு!!! விரல்கள் நடுங்க நடுங்கத்தான் தாலியை வாங்கிக்கொண்டான் பரத்.
'க...ண்ண...ம்மா' வாய் விட்டு அழைக்கிறான் அவளை. அவனை நோக்கி திரும்புகிறாள் அவள்.
தவிப்புடன் அவள் முகம் வருடுகிறது அவன் பார்வை. அவளே எதிர்ப்பார்க்காமல் எப்படி வந்தது என அவளே அறியாமல் தன்னாலே வந்து சேர்கிறது அது!!!
'புன்னகை!!!. சிலீரென ஒரு குளிர் புன்னகை. அவள் இதழ்களில்!!! சத்தியமாய், சத்தியமாய் இதை எதிர்பார்க்கவில்லை அவன்!!!
இப்போது சடக்கென அவன் கண்களில் கட்டிக்கொள்கிறது கண்ணீர்!!!
'கண்...ண...ம்மா!!! கண்...ணம்...மா!!! என் கண்....ணம்.....மா!!! என் பல வருட தவத்திற்கான பலனடி இது'
மேகமும், இடியும் மழையும், மலர்களும் சுற்றி உள்ள நல்ல மனங்களும் என எல்லாமே வாழ்த்த, பூ மழைக்கு நடுவில் அபர்ணாவின் கழுத்தில் தாலியை கட்டிவிட்டிருந்தான் பரத்!!!
1/2 EPISODES TO GO
தொடரும்......
{kunena_discuss:982}