(Reading time: 29 - 57 minutes)

வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 18 - வத்ஸலா

VTVK

முதல் வாழ்த்து விஷ்வாவினுடயது!!! சந்தோஷ பரவசத்தில் இருவர் கையையும் ஒன்றாக சேர்த்து பிடித்து குலுக்கிகொண்டிருந்தான் அவன். அவளது அம்மாவில் தொடங்கி அவளருகில் இருந்த ப்ரியாவரை எல்லாரிடமும் மகிழ்ச்சியை தவிர வேறொன்றும் இல்லை.

இப்போது அவள் கரம் பற்றி அக்னி வலம் வரவேண்டும். அவள் கரம் பற்றிக்கொள்ள  தவிப்புடன் அவள் முகம் பார்க்கிறான் பரத். அந்த பார்வையில்.....

'கண்ணாடி வளையல்!!! அன்னைக்கு நீ கீழே விழுந்தப்போ எல்லாம் உடைஞ்சு போச்சு. அதான்.... முன்பு ஒரு முறை அவளிடம் கையில் வளையல் பெட்டியுடன் தனது காதலை சொன்ன பரத்தான் நினைவுக்கு வருகிறான்.  

மெதுவாக அவனை நோக்கி தன்னாலே நீள்கிறது அவள் கரம். பொக்கிஷமாய் பற்றிக்கொள்கிறான் அதை.

அவளுக்கு முழு சம்மதம்தானா திருமணத்தில்??? இந்த கேள்வி இன்னமும் மிச்சம் இருக்கிறது அவனுக்குள். புரிகிறது அவளுக்கு அவளது இன்னொரு கரமும் எழுந்து அவனது கையை மெல்ல பற்றிக்கொள்கிறது.

சாதரணமான ஒரு தொடுதல்தான் அது. ஆனாலும் பல நூறு பதில்களை அவனுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறது அது. சந்தோஷத்தின் உச்சியில் நின்றிருக்கிறான் பரத்.

நேற்று காலை வரை கூட இப்படி ஒரு திருமணம் நடக்குமென நினைக்கவில்லைதான் அபர்ணா. இதோ அவள் கழுத்தில் மின்னிக்கொண்டிருக்கிறது பரத் கட்டிய தாலி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

நேற்று மதியம் விழுந்தடித்துக்கொண்டுதான் மண்டபத்துக்கு வந்தாள் ப்ரியா. அப்போதுதான் மற்ற தோழிகள் இவள் கையில் மருதாணி கோலம் வரைந்துக்கொண்டிருந்தனர். அவளை தனியே அழைத்து சென்ற ப்ரியா அபர்ணாவை ஆராய்ந்தபடி.

'ஹேய்... உடம்புக்கு என்னடா??? என்றாள் தவிப்புடன்

உடம்புக்கா??? எனகென்ன நல்லாதானே இருக்கேன்.'

'அப்போ ஏன் அருண் என்னென்னவோ சொல்றான்.???'

'என்ன சொல்றார் ப்ரியா.. எனக்கெதுவும் தெரியாது.'

'அவங்க எல்லாரும் எப்போ கிளம்பறாங்கன்னு தெரிஞ்சிக்க போன் பண்ணேன். அபர்ணா என்னை ஏமாத்திட்டா. அவளுக்கு உடம்புல ஏதோ பிரச்சனை இருக்கு. குழந்தை பிறக்காதுன்னு நிறைய டெஸ்ட் பண்ணி பார்த்திட்டு டாக்டர் சொல்லிட்டாங்கன்னு இப்போ வந்து சொல்றா. பதினஞ்சு நாளைக்கு முன்னாடிதான் எனக்கே தெரியும்..கல்யாணத்துக்கு முன்னாடி உங்களுக்கு சொல்லிடணும்னுதான் இப்போ சொல்றேன். இந்த விஷயம் வேறே யாருக்கும் தெரிய வேண்டாம். நமக்குள்ளேயே இருக்கட்டும்ன்னு சொல்றா. என்ன தைரியம் இருக்கணும் அவளுக்குன்னு கத்தறான் போன்லே..' என்றாள் படபடபடவென. 'இவளை கட்டிக்கிட்டு நான் என்ன பண்ண???  நான் வரவே போறதில்லை மண்டபத்துக்குன்னு சொல்றான் அவன்'

அவள் சொல்வது முழுவதுமாக பிடிபடவே முழுதாக ஒரு நிமிடம் தேவைப்பட்டது அபர்ணாவுக்கு.

'நான் அவரை பார்த்தே பத்து நாள் ஆச்சு. கடைசியா அத்தையோட அறுபதாம் கல்யாணத்திலே பார்த்ததுதான்...'

'அப்போ இது எப்படி??? அபர்ணா நேர்லே வந்து சொன்னான்னு சொல்றான்.' ப்ரியா யோசனையுடனே கேட்டாள். 'பொய்யா இருக்குமா???'

எப்போதும் போல் படபடத்தெல்லாம் போய்விடவில்லை அபர்ணாவின் மனது.

'இவளை கட்டிக்கிட்டு நான் என்ன பண்ண??? நான் வரவே போறதில்லை மண்டபத்துக்கு' இந்த வார்த்தைகள் ஒரு பெண்ணாக அவளை சுருக்கென தைத்தன.

சற்றே நிதானமாகத்தான் கேட்டாள் 'மண்டபத்துக்கு வர மாட்டேன்னு சொன்னாரா??? 'இவளை கட்டிக்கிட்டு நான் என்ன பண்ண???  அப்படின்னு நிஜமா கேட்டாரா ப்ரியா???'

'அப்படித்தான் சொன்னான் அபர்ணா...' என்றாள் ப்ரியா மெதுவாக.  'ரொம்ப குழப்பிக்காதே ஒரு தடவை அருண்கிட்டே பேசிடு..'

அதற்குள் 'ஹேய்... அங்கே என்ன அரட்டை சீக்கிரம் வா..' மருதாணி வரைந்துக்கொண்டிருந்த தோழி அழைக்க

'இதோ வரேன்..' என்றபடி சலமில்லாமல் நகர்ந்தாள் அபர்ணா. அப்போதுதான் உள்ளே நுழைந்தனர் அஸ்வினியும் பரத்தும்.

'இந்த மெஹந்தி டிசைனோட சேர்த்து மாப்பிள்ளை பேரையும் கையிலே எழுதிடுவோமா???

'அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அதெல்லாம் ஓல்ட் ஃபேஷன்' என பாய்ந்த அஸ்வினியும், அவள் பார்வையை சந்திக்கவே இயலாமல் தவிர்த்துக்கொண்டிருந்த பரத்தும் அவளது மனதை துளைத்துக்கொண்டிருந்த பல கேள்விகளுக்கு விடை கொடுத்துக்கொண்டிருந்தனர்.

'இது எல்லாவற்றுக்கும் காரணம் இவர்கள் இருவருமா???

ஒரு கட்டத்தில் எல்லாரும் அறையை விட்டு வெளியேறி இருக்க ப்ரியாவும் அபர்ணாவும் மட்டும் தனித்திருக்க

'ப்ரியா ஒரு வேளை அஸ்வினி என்னை மாதிரி போய் பேசி இருப்பாளோ  அருண்கிட்டே..' என்றாள் அபர்ணா.

திடுக்கென நிமிர்ந்தாள் ப்ரியா. 'அவ எதுக்கு அப்படி செய்யணும்???'

அவளுக்கு ஆரம்பத்திலிருந்தே அருணை பிடிக்காது. இப்போ பரத்துக்கு ஹெல்ப் பண்ண இப்படி பண்ணி இருந்தா??? அவ பேசினதை பார்த்தா எனக்கு என்னமோ அப்படி தோணுது'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.