06. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ
“திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை
கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா
என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு
மாதம் பத்து செல்ல மழலை பெற்றுக்கொள்ள
அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு
கொழுசு இடும் ஓசை கேட்டே மனசில் உள்ள பாஷை சொல்வாய்
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே..”
வீட்டிற்கு வந்து தன் தந்தையிடம் பேசுவதற்காக காத்திருந்தாள் சஹானா..கீழே அவரும் துளசியும் பேசி கொண்டிருப்பது காதில் விழுந்தது..சற்று நேரத்தில் தந்தை தோட்டத்தில் வாக் செல்ல கிளம்பிவிடுவார் என அதற்காக காத்திருந்தாள்..அதன்படியே துளசி கிச்சனுக்கு செல்ல சேகர் எழுந்து தோட்டத்திற்கு சென்றார்..மெதுவாய் கீழிறங்கி அவரை நோக்கி சென்றவள் டாட் உங்ககிட்ட கொஞ்சம் பேசனுமே..
வாடா நீ தூங்கியிருப்பநு அம்மா சொன்னா??இவ்ளோ நேரம் உன்ன ஆளையே காணும்??என்ன விஷயம்??
பெருசா ஒண்ணுமில்லப்பா என் கல்யாணத்தை பத்தி தான்..
ஒரு நொடி அதிர்ந்தவர் அவளின் முகத்தை கூர்ந்து நோக்கினார்..அப்பா வழக்கம்போல விளையாட்டெல்லாம் இல்ல சீரியஸா பேசனும்..
என்ன சஹானா நா தான் மாட்டினேனா இன்னைக்கு சரி சொல்லு கல்யாணத்தைபத்தி என்ன??
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ராசுவின் "நீ தான் என் சந்தோஷம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
இல்ல எனக்கு மாப்பிள பாக்குறதுனா எப்படி பாப்பீங்க??
இது என்னடா கேள்வி..சொந்தகாரங்ககிட்ட ப்ரெண்ட்ஸ்கிட்டநு சொல்லி வைப்பேன்..இல்ல மேட்ரிமோனியல் அது இதுநு எவ்வளவோ வந்துருக்கே..
ஓஓ..ம்ம் சரி அப்பறம்..
அப்பறம் என்ன பையனபத்தி விசாரிக்கனும்,பேமிலி எப்படி பையன் கேரெக்டர் எப்படி உன்ன நல்லா பாத்துப்பானானு தெரிஞ்சுக்கனும்..
ஸ்டேடஸ் விட்டுடீங்களேப்பா..
அது ஒண்ணும் பெரிய விஷயமில்ல சஹானாம்மா அப்படி ஸ்டேடஸ் பாத்துதான் கல்யாணம் பண்ணணும்னா உங்க தாத்தா எனக்கு பொண்ணே குடுத்துருக்க முடியாது..குணம் தான்ம்மா முக்கீயம்..
வாவ் சூப்பர் டாட் நா என்னவோநு நெனைச்சேன்..சரி எதுக்கு நீங்க இவ்ளோ கஷ்டபட்டு மாப்ள தேடிக்கிட்டு அதுக்கு பதிலா உங்களுக்கு தெரிஞ்ச எனக்கும் ரொம்ப பிடிச்ச கார்த்திக்குக்கே என்ன கல்யாணம் பண்ணி வச்சுரலாம்ல..
சஹானா!!!!!!
அப்பா ப்ளீஸ் இந்த படத்துல,சீரியல்ல வர மாறி எதாவது டயலாக்லா பேசிடாதீங்க..ஐ லவ் ஹிம் சோ மச்..நா இப்போ உங்ககூட எவ்ளோ சந்தோஷமா இருக்கேனோ அதே மாறி என் வாழ்க்கை புல்லாயிருப்பேன்..நானே கஷ்டபட்டு கார்த்திக்க ஒத்துக்க வச்சுருக்கேன் ப்ளீஸ் டாடி..நோ சொல்லிடாதீங்க..
அவள் கூறிய விதத்தில் லேசாய் சிரித்தேவிட்டார்..கண்ணா எப்படிடா நீயோ இப்படியிருக்க கார்த்திக் ரொம்ப காம் டைப்பாச்சே எப்படி???
ப்பாபாபா உங்க முடிவ மொதல்ல சொல்லுங்க இந்த க்வெஸ்டின்க்கு எங்களுக்கே பதில் தெரியாது..
தெரியாதா… சஹானா இது ஒண்ணும் விளையாட்டு காரியம் இல்ல..நல்லா யோசிச்சுதான் பேசுறியா??
200% கான்விடண்ட் டேட்..
சிறிது நேரம் அமைதி காத்தவர் நீண்ட மூச்செடுத்துவிட்டு சரிம்மா நீ கார்த்திக்க நாளைக்கு என்ன பார்க்க வர சொல்லு அதுக்கப்பறம் என் முடிவ சொல்றேன்..டாடி???
கண்டிப்பா பாஸிட்டிவ் ரிசல்ட் சொல்ல ட்ரை பண்றேன் போதுமா??