(Reading time: 5 - 10 minutes)

08. காதல் கீதம் - Deivaa Adaikkappan

Kadhal geetham

து நீ எப்போ மா ஆபீஸ் வர இப்போ தான் உனக்கு உடம்பு சரி ஆயிருச்சில்ல ..............

அப்பா நான் ஆபீஸ்க்கு கண்டிப்பா வரணுமா..........

ஆமாம் இந்து நீ வந்து தான்  ஆகணும்............நிறைய வேல நீ வந்தா தான் முடிக்க முடியும்...........

என்ன அண்ணா சொல்ற.......

இல்ல மா நீ சைன் பண்ண deals எல்லாம் நீ வந்து தானே முடிக்கணும் அதை சொல்றான்..............

கதிர் அண்ணா நீ மஹியை ஏற்காடு கூட்டிட்டு போக போறதா மஹி சொன்னா.............

ஆமா டா அவ ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துக்குறா டாக்டரும் இடம்மாற்றம் அவளுக்கு வேணும்னு சொல்றாங்க சோ நாம எல்லாரும் ஏன் ஒரு டூர்  போக கூடாதுனு நெனச்சேன்.......... அதுக்கு தான் எல்லாருக்கும் டிக்கெட் புக் பண்ண கிளம்பிகிட்டு  இருக்கோம்.........

நாங்கல்லாம் எதுக்குபா நாங்க இங்க இருக்கோம் நீங்க சின்ன பசங்கெல்லாம் போயிடு என்ஜோய் பண்ணிட்டு வாங்க..........

இல்ல பா நீங்களும்தான் பிசினஸ் பிஸிநெஸ்ஸ்னு டென்ஷனாவே இருப்பீங்க அதனால எல்லாருமே போயிடு வந்துரலாம் .................

லட்சுமி அம்மாவையும் அப்பாவையும் கூப்ட்ருக்கோம் அவங்களும் வரேன்னு சொல்லிருக்காங்க இப்போ மது குட்டிக்கும் லீவு தானே...............

சரிப்பா எல்லாருக்கும் இஷ்டம்னா நாம போயிட்டு வந்துரலாம்...........

இந்து டூர் முடிச்சு வந்துட்டு நீ ஆபீஸ் கண்டிப்பா வரணும் மா.

சரிப்பா வரேன்.........

கதிர் எதுக்கு டா டிக்கெட் எடுக்கணும் நம்ம எல்லாருகிட்டயும் கார் இருக்குதுல்ல அதுல pogalaam............

இல்ல டா ஹில் ஸ்டேஷன்ல நம்மளால ஓட்ட முடியாது............சோ வேற ஏதாவது ஏற்பாடு பண்ணலாம்........

ஏன்பா பேசாம நாம உங்க பிரென்ட் கிட்ட கேட்டு அவரோட டெம்போ ட்ராவெல்லேர்ல போயிடு வரலாமா ..............

இதுவும் நல்ல யோசனையா இருக்கு கதிர்..... அப்பப்போ நம்மளும் கொஞ்சம் ஓட்டிகலாம் .................

ஏங்க இவங்க ரெண்டு பெரும் ஓட்டலைனா தான் நாங்க வருவோம் இல்லைனா நாங்க யாரும் வரமாட்டோம்........

அப்டி சொல்லுங்க அண்ணி இந்த பசங்க தொல்லை தாங்க முடில நாங்க பேக் பண்ற வேலைலாம் முடிச்சிட்டோம் அதுனால நாங்கபோய் ஷாப்பிங் வேலைலாம் முடிச்சிட்டு வரோம் மஹி நீ என் கூட வரியாமா ............

சேரி லட்சுமி மா வாங்க போகலாம் ..........

கதிர் நீயும் வாபா எங்களுக்கு துணையா இருக்கும்........

நான் பொய் காரை எடுக்குறேன் மஹி அம்மாவை பத்திரமா கூட்டிட்டு வா......

அனைவரும் ஏற்காடு கிளம்பும் நாளும் நெருங்கியது அன்று காலை முதலே இந்துவுக்கு தன்னை சுற்றி எடோ வலை பிண்ணப்படுவதாக தோன்றியது.

அனால் அது என்னவென்று புரியவில்லை…….

அமைதியாக அவள் கிளம்ப ஆரம்பித்தாள்..........

இந்து கிளம்பிட்டிய டா டைம் ஆயிடுச்சு.

இதோ மதுமா கொஞ்சநேரத்துல கீழ வந்துடறேன்........

மது கிளம்பிட்டாளா அம்மா...

ஹ்ம்ம் லட்சுமி கிட்ட அவ இருக்க டா. நீ மட்டும் தான் லேட்டா அப்பறோம் நம்மளால அங்க மலை ஏற முடியாதாம் உன் அண்ணனுங்க பறக்குறானுங்க

 இதோ மா டூ மினிட்ஸ் கிளம்பிடுறேன்........

டேய் தீபக் அவ கீழ வந்து இவன பாத்தா நம்மளை எல்லாம் உண்டு இல்லைனு பண்ணிருவா ...........

தம்பி மஹி சொல்றது சரி தான் பா இவ் அந்த இருக்காதா பாத்தாலே இந்து டென்ஷன் ஆயிருவா இந்த பய பண்ணி வச்சிருக்க வேல அப்டி எனக்கே இவான பாத்தா கொள்ளணும் போல இருக்கு.....

அப்பா இதனை வருஷம் இந்து கூட இருந்தும் உங்களுக்கு அவளை சமாளிக்க தெரியல இப்போ எங்க மதுமா சமாளிப்பாங்க பாருங்க.........

மித்ரன் நீங்க இந்து வந்து ஏர்னதுக்கப்புறமா வாங்க........

தீபக் இது ஒர்கவுட் ஆகுமா ...........

ஜி நீங்க பண்ணிவச்சிருக்க காரியத்துக்கு அவ உங்கள எவ்ளோ கேவலப்படுத்துனாலும் தாங்கிக்க தான் வேணும்......

அது அவளோட உரிமை தான் தீபக் நான் கேவலப்படுறதுக்காக பயபுடல நீங்க நெனைக்குறமாதிரி. நான் பயப்புடறதெல்லாம் எங்க என்ன பாத்து அவ டென்ஷன் ஆகுறதுல அவளுக்கு மறுபடியும் முடியாம வந்திருமோனு தான்.......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.