(Reading time: 13 - 25 minutes)

தனால்தானோ என்னவோ சுதர்ஷன் செய்த அந்த காரியத்துக்கு மௌன சாட்சியாகவே இருந்தாள் இவள்.  இப்போது உடைந்து கிடக்கிறான் விவேக். நொறுங்கி கிடக்கிறான் அவன். அவனுக்கான மருந்து ஒன்று என்னிடத்தில் இருக்கிறது. அதை அவன் கண்ணில் கூட காட்டப்போவதில்லை நான்!!!

அதே நேரத்தில் இங்கே விவேக்கின் விமானத்தில்

‘அம்மா.. வாம்மா காக்பிட் போகலாம் ஹரிணியின் அக்கா டாக்டர் சுஹாசினியை அரித்துக்கொண்டிருந்தான் மகன் ஸ்ரீநிவாசன்.

‘டேய்.. கொஞ்ச நேரம் பேசாம இரு.. இப்போ டியூட்டிலே இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணாதே. உன்கிட்டே போன் நம்பர் இருக்கில்ல அப்புறம் பேசலாம்...’ சொல்லிக்கொண்டிருந்தான் அவனது தந்தை ராகுல். எதுவுமே சொல்லத்தோன்றாமல் அமர்ந்திருந்தாள் சுஹாசினி.

காக்பிட்டிலிருந்து பார்த்தவனின் விழிகளை திருடியது கடற்கரையின் அழகு. வானில் இருந்த  நட்சத்திரங்கள் இப்போது நீரில் மிதக்கின்றது என்பது போல் விளக்குகளின் ஒளிச்சிதறலில் மிளிர்ந்த கடல் நீரை பார்த்திருந்தான் விவேக். சென்னையை நெருங்கிக்கொண்டிருந்தது அவர்களது விமானம்.

தரை இறங்கிய விமானத்திலிருந்து இறங்கவே மனமில்லாதவனாக திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு நடந்தான் சிறுவன் ஸ்ரீநிவாசன். சில நிமிடங்கள் கடந்திருக்க தங்கள் பெட்டிகள், உடமைகளுக்காக அவர்கள் காத்திருந்தனர் பெல்டின் அருகே!!!

தனது வேலைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த விவேக்கின் பார்வை வட்டத்துக்குள் விழுந்தான் ஸ்ரீநிவாசன். விழிகள் விரிய நின்றே விட்டான் விவேக்.

அவன் உதடுகள் மெல்ல உச்சரித்தன ‘ஸ்ரீ...நி.. வா..சன்...’

சில நிமிடங்கள் கடக்க கை நிறைய இனிப்புகளுடன் அவர்கள் பின்னால் வந்து நின்றான் விவேக்.

‘அப்பா விவேக் அங்கிளை பார்க்கலாம்பா. நான் போன் பண்றேன்பா..’

‘டேய்...கொஞ்ச நேரம் சும்மா இரு... ‘

‘அப்பா.. ... ப்ளீஸ்பா... ஒரே ஒரு தடவை...’ அவன் கெஞ்ச...

‘ஸ்ரீநிவாசா...’ விவேக் அழைக்க சரேலென திரும்பியவன் அடுத்த நொடி மண்டியிட்டு அமர்ந்த விவேக்கின் கைகளுக்குள் வந்து சேர்ந்து இருந்தான்.

அப்பாவை தவிர இப்படி யார் அணைப்பிலும் கட்டுண்டதாக நினைவில்லை விவேக்குக்கு. எந்த விதமான பந்தமிது புரியவில்லை அவனுக்கு.

காலையில் பார்த்தவனை ஏதோ பல நாட்கள் கழித்து பார்க்கும் தவிப்புடன் கேட்டான் விவேக் ‘எப்படிடா இருக்கே கண்ணா???’

அதே நேரத்தில்

இந்த வாரம் முழுவதும் சென்னையில் சில திருமணங்களில் சமையல் வேலை செய்வதற்காக மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் பேருந்தில் ஏறினார் அவர். தாமோதரன்!!! சுஹாசினி மற்றும் ஹரிணியின் தந்தை தாமோதரன்!!!!

இந்த அத்தியாயத்திற்கான படத்தை மிக அழகாக வடிவமைத்து நம்முடன் பகிர்ந்திருக்கிறார் நம் தோழி பிரதீபா ஸ்ரீதரன். Thanks a  looooooooooooooot Pradeepa Sridaran!!!!

 

தொடரும்......

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1049}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.