17. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்
அஜயும் அவன் அப்பாவும் போவதை பார்த்துக்கொண்டே பாவம் நல்ல மனுஷன் ஆனால் மகனை வளர்க்கத்தெரியவில்லை என்ற மஹிந்தன் தன் அப்பாவிற்கு போன்செய்த்து எஸ் என் வி மோட்டார்ஸ் கம்பெனி போர்ட் மீட்டிங் ஏற்பாடு செய்துவிடீர்களா? என கேட்டான். அதற்க்கு அவர் ஈவினிங் 5 மணிக்கு அரேன்ஞ் செய்திருக்கிறேன் மஹிந்த் என்றார்.ஓகே டாட் நான் மற்ற வேலைகளை முடித்து சரியான நேரத்திற்கு மீட்டிங்கில் அட்டன் செய்திடுவேன் என்று கூறி தொடர்பைத் துண்டித்தான்.
அதன் பின் அவனது வேலைகள் அசுரவேகத்தில் இருந்தது. பார்த்தீபன் கூறியபடி தன் மனைவி மதுராவின் பெயரிலிருந்த பங்குகளை மஹிந்தன் பெயருக்கு மாற்றி எழுதினார்கள் மஹிந்தன் கொடுக்க இருப்பதாகச் சொன்ன கம்பெனியை தன் தங்கை மதுராவின் பெயருக்கு அவர்களின் குடும்பத்தாரின் முன் மாற்றிக்கொடுத்தான்.
பின் ஐஸ்வர்யாவின் அப்பாவிடம், அஜய்யின் அப்பா நாளை ஐஸ்வர்யாவிற்கும் அஜய்குமான கல்யாணத் தேதியை முடிவு செய்ய அவர்கக்ளின் வீட்டிற்கு வருவதை தெரிவித்தான்.
மேற்கூரியவேலைகள் முடிய மாலை 4.3௦5 ஆகிவிட்ட நிலையில் போர்ட் மீட்டிங் ஏற்பாடு செய்து இருந்த நேரத்தில் வீட்டு வேலைகாரி கஸ்தூரி வீட்டின் தொலைபேசியில் இருந்து அழைத்தாள். வீட்டின் நம்பரைப் பார்த்ததும் ழையாதான் கூப்பிடுகிறாள் என்ற ஆசையுடன் எடுத்தவன், ஐயா நான் கஸ்தூரி பேசுகிறேன், “நீங்கள் போனதும் மேலே போன அம்மா கீழேயே வரவில்லை நீங்கள் கூறியபடி மதியம் சாப்பாடு எடுத்துப் போனேன் வேண்டாம் என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார்கள் அதனால் தான் என்னசெய்ய என்று தெரியாமல் உங்களுக்கு போன் செய்தேன்” என்றாள்
மஹிந் நேற்று கஸ்தூரியை கூப்பிட்டு நான் வெளியில் வேலையாகப் போய் இருக்கும் நேரத்தில், ழையாவைப் பத்திரமாகப் பார்த்துகொள்ளும் படியும் நேரத்திற்கு அவளை சாப்பிட வைக்கும் படியும் சொல்லியிருந்தான்.
எனவே அவள், இப்பொழுது ழையா சாப்பிடாத விஷயம் தெரிந்தால் எங்கே தம் முதலாளி தன்னை வைவானோ என்று அவனுக்குப் போன் போட்டு சொல்லிவிட்டாள்.
ஓகே. நான் அவளிடம் பேசிக்கொள்கிறேன், என்றவன் தொடர்பைத் துண்டித்து அவர்களின் அறையில் இருந்த தொலைபேசிக்கு தொடர்பு கொண்டான். இன்னுமும் ழையாவின் மொபைலை அவளுக்கு கொடுக்கவில்லை சிறிது நேரம் கழித்து போனை எடுத்த ழையாவின் குரலில் தூங்கி எழுந்தவளின் தூக்கக்கலக்கமான “ஹலோ” என்ற குரல் கேட்டது
ழையா என்ற அவனின் குரலில், சற்று நிதானித்தவள் சொல்லுங்கள் என்று ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்தாள்.
நீ மதியம் சாப்பிட கீழே போகவில்லையாமே? ஏன் போகவில்லை? என்று கேட்டான்.
நான் தூங்கிவிட்டேன் என்று திரும்பவும் ஒரே வரியில் பதில் கொடுத்தாள்
அதென்ன மதியம் சாப்பிட கூட போகாமல் ,போன் மணி ரொம்பநேரம் அடித்தும் கூட எந்திரிக்காமல் என்னத் தூக்கம்? ஆர் யூ ஓகே? என்று கேட்டான்
உடனே கவிழையா, எல்லாம் உங்களால்தான் நேற்று என்னால் தூங்கவே முடியவில்லை காலையிலும் சீக்கிரமாகவே எழுந்த்துவிட்டதால் எனக்கு இப்படி தூக்கம் தூக்கமா வந்துவிட்டது என்றாள்.
பாவம் அவள் கூறியதன் அர்த்தமோ நேற்று இரவு அவனுடன் ஒரே அறையில் ஒரே பெட்டில் அவனுடன் தூங்க பயந்துகொண்டு இருந்ததை அவள் அந்த லட்ச்சனத்தில் சொல்லிவைத்தாள்.
அவள் அவ்வாறு கூறியதும் “என்னாலா பேபி!” அப்போ நான் உன்கூட என்ஜாய் பண்ணியது எல்லாம் கனவில் இல்லையா! உண்மையாகவே நமக்குள் எல்லாம் முடிந்துவிட்டதா பேபி என்று குலைந்த படி கேட்டான்.
அவன் அவ்வாறு கேட்டதும் தான், அவள் கூறிய விதம், இன்னுமொரு அர்த்தத்தை உணர்ந்தவள் உதடு தந்தியடித்தது.
அதை தன் பற்களால் இருக்கி தன்னை சமாளித்துக் கொண்டவள், வார்த்தைகளில் எரிச்சலை வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்டு கோபத்துடன் பேசுவதுபோல் “இப்பொழுது நீங்க எதற்கு கூப்பிட்டீர்களோ அதை மட்டும் சொல்லுங்கள், தேவையில்லாமல் பேசி என்னிடம் வம்பிழுத்து வாங்கி கட்டிக்கொள்ளாதீர்கள்” என்று கூறினாள்.
நான் வம்பிழுத்தால் நீ என்னை கட்டிக் கொள்வாயா? உன்னுடன் என்னை நீ கட்டிக்கொள்வதென்றால் நான் வம்பிழுத்துக் கொண்டே இருப்பேன் பேபி என்றான் குழைவுடன்.
அவன் அவ்வாறு கூறியதும் விதிர்விதிர்த்துப் போன ழையா டக் என்று தொடர்பை துண்டித்தாள்.
அவளுக்கு முகம் சிவந்திருந்தது அச்சோ இப்படிஎல்லாம் எப்படித்தான் இவனால் பேசமுடிகிறதோ? என்று கோபத்துடன் சொல்லிக்கொண்டாள். இருந்தாலும் அவளின் மனதின் ஓர் ஓரம் அவனின் சரசமான வார்த்தைகள் அவள் அவனுக்கானவள் என்று தன் நெஞ்சில் தொட்டுக்கொண்டிருந்த மாங்கல்யம் அவளுக்கு உணர்த்துவதை அறிந்த அவளின் உடலில் எதிர்பார்ப்புடன் கூடிய ஓர் நடுக்கம் பிறந்தது.
அவளது உதடுகள் இவன் எனக்கு ஏன் வில்லனாக அறிமுகமானான் முதலிலேயே எனக்கு காதலனாக ஏன் அறிமுகமாகாமல் போனான். இப்பொழுது என்னால் மஹிந்தனை முழு மனதுடன் ஏற்கவும் முடியவில்லை.
ஆனால் கணவன் என்ற உரிமையில் என்னால் அவனை ஒதுக்கவும் முடியவிள்லையே! “ஒருபுறம் மனது அவனுக்க ஏங்குகிறது மறுபுறம் அவனை வெறுக்கிறது” என்று தலையை பிடித்தபடி உட்கார்ந்தாள்.