Name : கடல் நிலவு: Kadal nilavu
Author : Srija Venkatesh
கடல் நிலவு என்ற இந்த நாவல் பல தளங்களிலும் பயணிக்கும் ஒரு சுவாரசியமான கதை.
இன்றைய மாடர்ன் இளைஞர்களான அஸ்வின், மதன், ராகவ் என்பவர்கள் மனம் வெறுத்து தற்கொலைக்கு முயலும் போது முன் பின் தெரியாத ஒரு பெரியவர் அவர்களைக் கடல் பயணம் மேற்கொள்ள சொல்கிறார். அவர்களும் சொகுசுக் கப்பலில் அந்தமான் தீவுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்தமான் சென்றார்களா? நடுக்கடலில் அவர்களுக்கு என்ன ஆனது? கற்பகத்தீவு என்பது என்ன? அங்கே அவர்களுக்கு ஏற்படும் பல விசித்திர சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. மீனாம்பிகை, முத்தழகி மற்றும் சங்கு புஷ்பம் என்ற மூன்று இளம் பெண்கள் இவர்களோடு நெருக்கமாகிறார்கள்.
ஆனால் அவர்கள் உண்மையிலேயே நல்லவர்கள் தானா? மாய மந்திரங்கள் தெரிந்த மாயாவிகளா? இறுதியில் மூன்று நண்பர்களுக்கு என்ன ஆனது?
ஆனால் அவர்கள் உண்மையிலேயே நல்லவர்கள் தானா? மாய மந்திரங்கள் தெரிந்த மாயாவிகளா? இறுதியில் மூன்று நண்பர்களுக்கு என்ன ஆனது?
அதைப் பற்றித்தான் விரிவாகப் பேசுகிறது கதை.
ஒவ்வொரு அத்தியாயமும் உங்களை பதட்டம் கொள்ள வைக்கும். மிகவும் விறுவிறுப்பான நாவல் இது.