Chillzee story Promotions - # 05 - Anbe unthan sancharame
Chillzeeயின் 96வது கதையாக வெளி வந்த இந்த தொடர், தேவியின் மூன்றாவது கதை.
கதை சுருக்கம்:
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மனைவி பிரத்யுஷாவை பிரிந்து வெளிநாடு செல்கிறான் ஆதர்ஷ்.
ஆதர்ஷ் - பிரத்யுஷா இடையே அன்பு இருந்தாலும், இந்த பிரிவு அந்த அன்பின் தன்மையை சோதிக்கின்றது. தெரிந்தோ தெரியாமலோ, சுற்றி இருக்கும் உறவுகளும் அவர்கள் இடையே கலகம் வர காரணமாகிறார்கள்.
நடக்கும் சம்பவங்களால் மனம் புண் படும் பிரத்யுஷா பேசா மடந்தையாக மாறி போகிறாள். எதுவோ சரி இல்லை என புரிந்துக் கொள்ளும் ஆதர்ஷ் நிலைமையை சரி செய்ய முயற்சிக்கிறான்.
ஆதர்ஷின் முயற்சி வெற்றி பெற்றதா? அவர்களின் வாழ்வு சீரான பாதைக்கு திரும்பியதா? என்பது மீதி கதை.
கதையில் பிடித்த விஷயங்கள் :
அழகான குடும்பபாங்கான கதை.
நிஜ வாழ்க்கையில் நாம் பார்க்கும் மனிதர்கள் போன்ற கதாபாத்திரங்கள், கதையுடன் எளிதில் ஒன்ற வைக்கின்றது.
கணவன் - மனைவி இடையே இருக்க வேண்டிய புரிதலை எடுத்து சொல்லும் கதையின் கரு, கதைக்கு மிக பெரிய பலம்.
அன்பே உந்தன் சஞ்சாரமே.... என்றும் உன் அருகில்...!
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'அன்பே உந்தன் சஞ்சாரமே' பக்கம் சென்று படியுங்கள்.
{kunena_discuss:788}