கருத்துக் கதைகள் – 35. அகந்தை அழிவைத்தரும்... - தங்கமணி சுவாமினாதன்
ஆற்றங்கரையின் ஓரத்தில் பிரம்மாண்டமாய் ஓங்கி கப்பும் கிளையுமாக செழித்து வளர்ந்திருந்தது அந்த அரச மரம்.தான் மிகவும் பலமோடு மிக உயரமாய் இருப்பதில் அம் மரத்திற்கு மிகவும் பெருமை.ரொம்பவும் கர்வம்.அதன் அருகில் நாணற் புல்லும் வளர்ந்திருந்தது.காறறடிக்கும் போதெல்லாம் வளைந்து கொடுக்கும் நாணல்.
ஆனால் காற்றால் பலம் வாய்ந்த தம்மை ஒன்று செய்ய இயலாது என்ற செருக்கோடு நிமிர்ந்து நிற்கும் அரச மரம்.காற்றுக்கு வளையும் நாணலைப் பார்த்து அடிக்கடி கேலி செய்யும் அரச மரம்.
ஒரு நாள் திடீரென்று புயல் அடித்தது.காற்று சுழன்று சுழன்றுஅடித்தது. செருக்கோடு நின்ற அரச மரம் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் வேரோடு சாய்ந்து மண்ணில் வீழ்ந்தது. வளைந்து கொடுத்த நாணல் எப்போதும் போல் அசைந்தாடிக்கொண்டிருந்தது.
கீழே கிடந்த அரச மரத்திற்கு வியப்பு.வலியை மிகுந்த தான் விழுந்து கிடக்க சின்னஞ்சிறு நாணல் சிறிதும் சேதமின்றி இருப்பதெப்படி என நினைத்தது.
நாணலிடம் தன் சந்தேகத்தைக் கேட்டது அரச மரம்.
அரச மரமே நீ புயலோடு செருக்குடன் எதிர்த்து நின்றாய்.ஆனால் நான் பணிவுடன் வளைந்து கொடுத்தேன்.அதனால் நான் உயிரோடு இருக்கிறேன்.நீ துன்பம் அடைந்தாய் என்றது.
இதுபோல்தான் மனித வாழ்விலும் புயலென துன்பம் வருவதுண்டு. செருக்குற்று எதிர்ப்பவர் வீழ்வர்.அமைதியாய் எதிர்கொள்பவர் ஜெயிப்பர்.என்றுமே பணிவு பயன் தரும்.செருக்கு சீரழிக்கும்.
கதை சொல்லும் கருத்து:
அகந்தை அழிவைத் தரும்...