அதிசய உலகம் - 01. அதிசய குழந்தை - தேன்மொழி
கதைகளை படிக்கும் போது இப்படி எல்லாம் நடக்குமா என சில சமயம் வியக்கிறோம்...! நடக்கவே நடக்காது என்று அடித்து சொல்கிறோம்...!
ஆனால் நிஜ உலகில் கதைகளில் வரும் கற்பனை சம்பவங்களை விட நம்ப முடியாத பல பல அதிசயங்கள் நடக்க தான் செய்கின்றன....
அது போன்ற சில சம்பவங்களை தான் இந்த தொடரில் தொகுத்தளிக்க போகிறோம்..
வியப்படைய தயாராகுங்கள்...!
1987ஆம் ஆண்டு நடந்த நார்த் வெஸ்ட் விமான விபத்தில் அந்த விமானத்தில் இருந்த 154 பயணிகள் மற்றும் நெடுஞ்சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த இருவர் என மொத்தம் 156 பேர் உயிர் இழந்தனர்.
கிளம்பிய ஒரு சில வினாடிகளில் நடைபெற்ற இந்த விமான விபத்து உலகம் முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த விபத்தில் நடந்த ஒரு அதிசயம் என்ன என்றால் அந்த விமானத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தை சிசிலியா மட்டும் சிறு காயத்துடன் உயிர் தப்பியது தான்.
கிட்டத்தட்ட ஒன்றரை மைல் வரை விமான பாகங்கள் சிதறிய இந்த விபத்து நடந்த இரண்டு மாதங்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அந்த குழந்தை விபத்தில் மற்ற நெருங்கிய குடும்பத்தினரை இழந்தது சோகம்!
ஆனால் இன்று வரை எப்படி அல்லது எதனால் சிசிலியா மட்டும் உயிர் பிழைத்தாள் என்பதை அறிவியலாலோ, இன்றைய தொழில்நுட்பதினாலோ விளக்க முடியாத அதிசயமாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
சில சம்பவங்கள் நம் பகுத்தறிவுக்கும் அப்பால் பட்டவை தான் போலும்!