அதிசய உலகம் - 10. அம்மாவின் ஸ்பெஷல் சூப்பை திருடிய மகன், போலீசில் கம்ப்ளெயின்ட் செய்த அம்மா! - தேன்மொழி
நம் அனைவருக்குமே அம்மா சமையல் ஸ்பெஷல் தான். உங்கள் அம்மாவுடைய ஸ்பெஷல் டிஷ்ஷை சாப்பிட எந்த அளவிற்கு செல்வீர்கள்???
ஜோனாதன் ரே எனும் இருபத்தி மூன்று வயது வாலிபர் தன்னுடைய அம்மா தயார் செய்து வைத்திருக்கும் ஸ்பெஷல் சூப் வேண்டும் என்று எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுமதி கேட்டார்.
அவருடைய அம்மா, சூப்பை தொடக் கூடாது என்று பதில் அளித்தார்.
ஆனாலும் திடீரென வீட்டினுள் புகுந்த ரே, அம்மா தயார் செய்து வைத்திருந்த சூப் இருந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்!
விஷயம் இங்கே முடியவில்லை!!!
சூப் பாத்திரம் காணாமல் போய் இருப்பது தெரிந்த உடன் போலீசை அழைத்து கம்ப்ளெயின்ட் செய்தார் அம்மா.
போலீசும் ரே மீது திருட்டு குற்றம் பதிவு செய்தார்கள்.
கேஸ் கோர்ட்டுக்கும் வந்தது!
வழக்கை விசாரித்த நீதிபதி, ரே சூப்பை திருடியதை நேரடியாக பார்த்த சாட்சி இல்லை என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்தார்!
{kunena_discuss:1125}