Chillzee சமையல் குறிப்புகள் - ராஜ்மா (பவள மொச்சை) புலாவ்
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.
இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!
தேவையான பொருட்கள்
50 கிராம் ராஜ்மா (பவள மொச்சை)
1 கப் பாஸ்மதி அரிசி
2 பச்சை மிளகாய்
2 டேபிள் ஸ்பூன் நெய்
100 கிராம் வெங்காயம்
150 கிராம் தக்காளி
உப்பு
1 ஸ்பூன் மிளகாய் தூள்
1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
1 பிரிஞ்சி இலை
3 கிராம்பு
6 மிளகு
1/2 இன்ச் இஞ்சி
1 பட்டை
1 ஸ்பூன் சீரகம்
கொத்தமல்லி இலை
செய்முறை
ராஜ்மாவை (பவள மொச்சை) குறைந்தபட்சம் 6-7 மணி நேரம் ஊற வைக்கவும். பின் ஊற வைக்க பயன்படுத்திய நீரை கொட்டி விட்டு, புதிய நீருடன் ப்ரெஷர் குக்கரில் நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியைக் கழுவி ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும், சீரகம், பிரிஞ்சி இலை, கிராம்பு, பட்டை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
நசுக்கிய இஞ்சி, சிறிதாக நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
பின், நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்றாக வெந்து கலக்கும் வரை வதக்கவும்.
1/4 கப் தண்ணீர் சேர்த்து மசாலாவை ஒரு நிமிடம் வேக விட்டு, குக்கரில் வேக வைத்து வைத்திருக்கும் ராஜ்மாவை சேர்த்து, நன்கு கலக்கவும்.
இப்போது ஊறவைத்த அரிசியை வடிகட்டி கடாயில் சேர்த்து மெதுவாக எல்லாவற்றையும் கலக்கவும்.
நீங்கள் பயன்படுத்தும் பாஸ்மதி அரிசிக்கு ஏற்ப வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து, ப்ரெஷர் குக்கரில் 2 அல்லது 3 விசில்கள் வைத்திருந்து தீயை அணைத்து விடவும்.
ப்ரெஷர் நீங்கி குக்கர் திறந்த உடன், மேலே மல்லி இலையை தூவி, ரைதாவுடன் பரிமாறவும்!