(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - பன்னீர் மசாலா

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.

இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!

  

தேவையான பொருட்கள்

200 கிராம் பன்னீர்

2 ஸ்பூன் துருவிய இஞ்சி

1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்

1/2 ஸ்பூன் மிளகாய் தூள்

1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்

1 தக்காளி

1/2 கப் தண்ணீர்

கொத்தமல்லி இலைகள்

¼ ஸ்பூன் மிளகுத் தூள்

4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

3 சின்ன சைஸ் வெங்காயம், நறுக்கியது

1/2 கப் தயிர்

  

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கவும்.

    

அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயம் வதங்கிய உடன், இஞ்சி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

 

நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து, சிம்மில் சுமார் 10 நிமிடங்கள் வேக விடவும்.

 

அரை கப் தயிர் சேர்த்து, வற்றும் வரை காத்திருந்து உப்பு சேர்க்கவும்.

 

இப்போது அரை கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக கொதிக்க விடவும்.

 

பன்னீர் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும். மசாலா நன்றாக கலக்கும் வரை ஸ்டவ்வில் வைத்திருக்கவும்.

 

பிறகு மிளகுத் தூள் தூவி ஸ்டவ்வில் இருந்து அகற்றவும்.

  

சப்பாத்தி உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.