Chillzee சமையல் குறிப்புகள் - பாலூட்டும் தாய்மார்களுக்கான பத்திய உணவு - ரஞ்சி
தேவையான பொருட்கள்
மிளகு (Pepper) – 5 டீஸ்பூன்
சுக்கு – 1 துண்டு
ஜீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – ௧௦ பற்கள்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – ½ டீஸ்பூன்
திப்பிலி – 4
உப்பு – சிறிதளவு
செய்முறை
- வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் மிளகு மற்றும் திப்பிலியை ஒன்றாக சேர்த்து சிறிது வறுத்துக் கொள்ளவும். அதை தனியாக எடுத்து வைக்கவும்.
- அதே வாணலியில், ஜீரகம் மற்றும் கடுகையும் வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.
- பின் வெந்தயத்தை வறுத்து எடுத்து வைக்கவும்.
- ஓமம், சுக்கு, பெருங்காயம் மூன்றையும் ஒன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- வறுத்த அனைத்து பொருட்கள் மற்றும் பூண்டு பற்களையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுதை சிறிது தண்ணீர் கலந்து குழம்பு பதத்தில் கலக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- மிகவும் சிறிதளவு உப்பை சேர்க்கவும்.
- கலவை கொதித்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
இதை வழக்கமான உணவிற்கு முன் மூன்று வேளை குடித்து வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும், அஜீரண கோளாறுகளும் நீங்கும். நன்றாக பசி எடுக்கும்.