வீட்டுக் குறிப்புகள் - 26 - கோலம் போட போறீங்களா? - சசிரேகா
கோலம் போட ஆரம்பித்து முடிக்கும் போது தெற்கில் முடிக்க கூடாது வேறு திசையில் முடிக்க வேண்டும்
வீட்டிற்குள் கோலம் போடும் போது கோலப்பொடியுடன் அரிசி மாவு கலந்து போடக்கூடாது
கோலம் இரண்டு இழை, நான்கு இழையில் போடலாம் மூன்று இழையில் கண்டிப்பாக போடக்கூடாது
தினம் இரவு அடுப்பைத் துடைத்தப்பிறகு கோலம் போடும் போது ஸ்ரீக்ஷ்யம் என்று தமிழிலோ அல்லது சமஸ்கிருதத்திலோ எழுதி வர அளவிலா ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை
காலையில் நான்கு கோடுகள் உள்ள கோலமும் மாலையில் 2 கோடுகள் உள்ள கோலமும் போட வேண்டும் என்பது ஐதீகம்
புள்ளி அதிகம் வைத்துப் போடும் கோலம் புண்ணியம் சேர்க்கும்
பூஜையறையில் அரிசிமாவு கொண்டு கோலம் போடும் போது கோடு சரியாக இழுக்க வராது அரிசி மாவுடன் சிறிது விபூதியை கலந்து கோலம் போட்டால் கோலம் சீரான கம்பியாக இழுக்க வரும்.
{kunena_discuss:747}