வீட்டுக் குறிப்புகள் - 25 - சசிரேகா
ஒரு டீஸ்பூன் வினிகரை சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து மரச்சாமான்களை துடைத்தால் பளிச்சிடும்
டைனிங் டேபிள் மீது ஒரு கிண்ணத்தில் சிறிது புதினா இலையை போட்டு தண்ணீர் ஊற்றி அதில் சிறிது உப்பையும் கலந்துவிடுங்கள் ஈக்கள் தொல்லை இருக்காது
ஜரிகை துணிகளை இஸ்திரி போடும் போது துணியின் மீது மெல்லி பருத்தி துணியை போட்டு அதன் மேல் அயர்ன் செய்ய ஜரிகை சுருங்காது
பல்ப் கண்ணாடி பொருட்கள் கீழே விழுந்து உடைந்தால் சப்பாதிக்கு பிசைந்த கோதுமை மாவு உருண்டையை உடைந்த கண்ணாடி துகள்களின் மீது உருட்டி எடுத்தால் ஒட்டிக்கொள்ளும்
தண்ணீரில் சூடத்தை கரைத்து பூஜையறையில் இருக்கும் சுவாமி படங்களின் மரச்சட்டம் இருக்கும் பகுதியை துடைத்து வந்தால் பூச்சி அரிக்காது.
அலமாரிகளில் போடும் நாப்தலின் உருண்டைகளை துணியில் சிறு முடிச்சுகளாக கட்டிப்போடலாம் ஏனெனில் துணிகளில் கறை படியும் அதைத்தவிர்க்க இப்படி செய்யலாம்.
{kunena_discuss:747}