வீட்டுக் குறிப்புகள் - 28 - சசிரேகா
சமையல் அறையில் கடிகாரம் இருப்பது மிக அவசியம் காலை நேர அவசரத்தில் சரியான நேரம் தெரிந்தால்தான் குழந்தைகளுக்கு டிபன் சாப்பாடு ஆகியவற்றை உரிய நேரத்தில் சமைத்து முடிக்க முடியும்
மோர்க்குழம்பு செய்யும் போது ஒரு ஸ்பூன் கடுகை அரைத்துச் சேர்த்தால் ருசியோ ருசிதான்
பால் திரிந்து விட்டால் அதன் மேலாக இருக்கும் நீரை வடிகட்டி விடுங்கள் ஒட்ட வடிக்காமல் கொஞ்சம் நீர்ப்பசை இருக்கும்படி வடியுங்கள். வடித்தபின் கிடைக்கும் பனீருடன் சம அளவு மைதா மாவு ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு உப்பு சேர்த்துப் பிசைந்து போண்டாவாகப் பொரித்தெடுங்கள் தேங்காய் சட்னியுடன் சூடாகச் சாப்பிட பிரமாதமாக இருக்கும்
ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பன்னீர் பட்டர் மசாலா அதிகமாக மிஞ்சிருந்தான் அதை அப்படியே ப்ரிட்ஜில் எடுத்து வைத்து மறுநாள் அதனுடன் கொஞ்சம் கோஸ் காரட் பாசிப்பருப்பு உப்பு சேர்த்து கூட்டு போல சமைத்தால் சப்பாதிக்கு சப்ஜி போல ஒரு புதுவகையான டிஷ் கிடைக்கும் ருசியும் அருமையாக இருக்கும்
கெய்சரை நாம் வெயில் காலத்தில் உபயோகிப்பதில்லை என்பதால் அதன் உட்பகுதியில் (காப்பார் பகுதி) துரு ஏறி விரைவில் கெட்டுவிடும் இதற்கு வெயில் காலத்திலும் நாம் சுவிட்ச் போடாமல் கெய்சர் குழாயைத் திறந்து ஒரு பக்கெட் நீராவது தினமும் பிடித்தால் துரு ஏறுவதைத் தடுக்கலாம்