வீட்டுக் குறிப்புகள் - 34 - சசிரேகா
சோடா உப்பு கலந்த தண்ணீரில் பெட்ஷீட்களை துவைத்தால் அழுக்குகள் மாயமாகிவிடும்
காப்பி டிகாஷனை இறக்கிய பின்பு அந்த தூளை வெயிலில் காய வைத்து சிறிதளவு சீயக்காய் பொடி சேர்த்து வைத்துக் கொண்டால் எவர்சில்வர் பித்தளை பாத்திரங்களை துலக்க பளிச்சென்று மாறும்
மழைக்காலங்களில் வெளியே செல்லும் போது வீட்டை பூட்டும் பூட்டை திருப்பி உள்புறமாக சாவி துவாரம் வருமாறு பூட்டிவிட்டு சென்றால் மழை தண்ணீர் பட்டு சாவிதுவாரம் துருப்பிடிக்காது
கையில் மண்ணெண்ணெய் (கெரோசின்) பட்டு கையில் வாடை வந்தால் தயிரை கொண்டு கையை கழுவினால் வாடை போய்விடும்
வீட்டில் எறும்புப்புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவி விடுங்கள் பலநாட்களுக்கு வீட்டில் எரும்பு புற்றே வைக்காது. அதன் தொல்லையும் இருக்காது.