வீட்டுக் குறிப்புகள் - 33 - சசிரேகா
கைகள் புக முடியாத கண்ணாடி பாட்டில்களின் அடியில் காணப்படும் கறைகளை போக்க எலுமிச்சப்பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி அதை பாட்டிலில் போட்டு பாதிக்கு மேல் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து குலுக்கினால் கறை போய்விடும்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் டவல்களில் ஈரநாற்றம் போக கொஞ்சம் வெள்ளை வினிகரை டிடெர்ஜன்ட் சோப் அல்லது சர்ப் பவுடரில் கலந்த தண்ணீரில் ஊற வைத்து துவைத்தால் நாற்றம் போய்விடும்
துணியில் எண்ணெய் கறையோ அல்லது க்ரீஸ் கறையோ பட்டுவிட்டால் துணி துவைக்கும் போது நீலகிரி தைலத்தை சில சொட்டுக்கள் விட்டு துணியை ஊற வைத்து அலசினால் கறைகள் போய்விடும்
பழைய எவர்சில்வர் பாத்திரங்களை கழுவும் போது வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை பாத்திரம் கழுவ பயன்படுத்தினால் எவர்சில்வர் பாத்திரங்கள் பளபளப்பாகிவிடும்.
கம்பளி ஆடைகளையோ போர்வைகளையோ தண்ணீரில் ஊறப்போடும் போது சிறிது ஆலிவ் எண்ணெய் ஊற்றி ஊற வைத்து அலசினால் புதிது போல இருக்கும்