(Reading time: 2 - 3 minutes)

வீட்டுக் குறிப்புகள் - 32 - சசிரேகா 

சுத்தமான கையகல ஸ்பாஞ்ச் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் கிரைண்டரில் மாவு அரைத்து சுத்தப்படுத்தியதும் அந்த ஸ்பாஞ்சால் மீதி ஈரத்தை ஒற்றி எடுத்துவிட்டால் கிரைண்டர் சீக்கிரம் காய்ந்து விடும் வாடையும் வராது

புதிதோ அல்லது நீண்டநாளாக பயன்படுத்தாமல் இருக்கும் ப்ளாஸ்கில் வாடை வராமல் இருக்க அதில் எப்போதும் ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு வையுங்கள்

ப்பத்தண்ணீரால் பாத்திரங்களில் வெள்ளையாக சொரசொரப்புடன் இருந்தால் மோர் ஊற்றி வைத்து 4 அல்லது 5 மணி நேரம் கழித்து பாத்திரத்தை கழுவினால் வெள்ளை திட்டுக்கள் மற்றும் சொரசொரப்பு போய் விடும்

கால் கொலுசு கறையாகி அழுக்காக இருந்தால் புளித்தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவிட்டு பிரஷால் தேய்த்தால் பளிச்சென்று மாறும்

யர்ன்பாக்ஸ் அடிப்பகுதி அழுக்குப்படிந்து இருந்தால் உப்பை போட்டு தேய்க்கவும் உடனே கறை விலகி பளப்பளபாகும் துணியிலும் அழுக்கு படியாது

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.