வீட்டுக் குறிப்புகள் - 40 - சசிரேகா
தரை துடைக்கும் போது கொஞ்சம் ஷாம்புவை நீரில் கரைத்து துடைத்தால் வீடு கமகமக்கும்
ஷுவை கழற்றி வைக்கும் போது அதில் நாப்தலின் உருண்டைகளை போட்டு வைத்தால் நாற்றம் இல்லாமல் இருக்கும்
மழைக்காலத்தில் வீட்டில் உள்ள மிதியடிகளின் உள்ளே மற்றும் அடியில் ஒரு நியூஸ் பேப்பரில் விரித்து அதன் மீது மிதியடிகளை வையுங்கள் ஈரம் உறிஞ்சிப்படும் எந்நேரமும் ஈரமாக இருக்காது.
தேங்காய் உடைக்கும் போது கிடைக்கும் நீரை சிறிது சுண்ணாம்பு டப்பாவில் ஊற்றி வைத்தால் நீண்ட நாள் சுண்ணாம்பு காய்ந்து போகாமல் இருக்கும் வெற்றிலை போடும் போது சுவையாக இருக்கும்
கல் உப்பு டப்பாவின் நடுவில் எலுமிச்சை பழத்தை அமுக்கி வைத்தால் ஒரு வாரம் வரைக்கும் பழம் பசுமையாகவே இருக்கும்